டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அம்புலி 3டி, ஓர் இரவில் படங்களை இயக்கிய இரட்டையர்களான ஹரி-ஹரீஸ் மூன்றாவதாக இயக்கியுள்ள படம் ஆ. இதுவும் அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட கதையில்தான் தயாராகியுள்ளது. அம்புலி படத்தில் நடித்த கோகுல்நாத்துடன் சிம்ஹா, மேக்னா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில், கேயார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
அப்போது அவர் பேசுகையில், எப்போதுமே 3டி படங்களுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், இந்த இயக்குனர்கள் முதலில் இயக்கிய அம்புலி 3டி படம் சிறப்பாக இருந்ததோடு வெற்றியும் பெற்றது. நான்கூட 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1984ல் மைடியர் குட்டிச்சாத்தான் என்ற படத்தை வெளியிட்டேன். அப்போது அந்த மாதிரி படங்களை வெளியிட தியேட்டர் வசதியே கிடையாது. அதனால் சென்னையில் சத்யம் தியேட்டரில் மட்டுமே அந்த படத்தை வெளியிட்டேன். அதையடுத்து 3டி படங்களை வெளியிட வசதி உள்ள தியேட்டர்களாகப் பார்த்து வெளியிட்டேன். ஒரு வருடம் அந்த படம் ஓடி வசூல் சாதனை புரிந்தது. பின்னர் 1996ல் அப்படத்தை ரீ-ரிலீசிஸ் செய்தபோது 150 நாட்கள் ஓடியது.
மேலும், சமீபத்தில்கூட ரஜினி நடித்த கோச்சடையான் படம்கூட 3டி தியேட்டர்களில் வெளியிட்ட இடங்களில் நல்ல வசூல் செய்திருக்கிறது. ஆக, 3டி படங்களுக்கு நம்ம மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி முதல் படத்தையே 3டியில் எடுத்து வெளியிட்ட அந்த இயக்குனர்கள் அதேபோன்று இப்போது ஹாரர் கதையில் இந்த ஆ படத்தை எடுத்திருக்கிறார்கள்.
பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது நமக்குத் தெரியாது. ஆனால், இருக்கிறது என்று சொல்லி அது சம்பந்தப்பட்ட கதையை படமாக்கியிருக்கிறார்கள். அதோடு ஆ என்ற எழுத்தில் அவர்கள் அச்சுறுத்தும் வகையில் டிசைன் செய்திருப்பது அற்புதமாக உளளது. சமீபகாலமாக, பீட்சா, யாமிருக்க பயமே போன்ற பேய் கதையில் உருவாகிய படங்கள் வெற்றி பெற்ற வருவது போன்று இந்த படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கேயார் பேசினார்.