Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுப்ரீம் கோர்ட்டுக்கு கடமைப்பட்டுள்ளேன் : குஷ்பு பேட்டி

29 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

கற்பு குறித்த சர்ச்சைகள் தொடர்பாக தன் மீது போடப்பட்டிருந்த 22 வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டுக்கு தான் கடமைப்பட்டுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு முன் ஆண் - பெண் உ‌டலுறவு தவறில்லை என்று நடிகை குஷ்பு அளித்த பேட்டி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புகள் குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், அவர் மீது வழக்குகளையும் தொடர்ந்தனர். அந்த வழக்குகளில் குஷ்புவுக்கு எதிராக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற குஷ்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. குஷ்பு பேசியதில் தவறில்லை என்று கருத்து தெரிவித்த கோர்ட், அவருக்கு எதிரான 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில், நீதிக்காக போராடுபவர் நேர்மையானவராக இருந்தால் போதும். அரசியல், பண பலத்தை எதிர்த்து வெற்றி பெறலாம். சாதாரண குடிமக்களை காக்க சட்டம் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. கற்பு பற்றி நான் கூறியவற்றில் ஒரு பகுதியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முழுமையாக ஆராய்ந்து தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் கடமைப் பட்டுள்ளேன். கடந்த எனக்கும், எனது கருத்துக்கும் ஆதரவு தெரிவித்து வந்த நண்பர்கள், பொதுமக்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி சுதந்திரமாக பேசுவேன். எனது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிப்பேன், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

suresh - chennai,இந்தியா
22 செப், 2011 - 13:11 Report Abuse
 suresh Congrats kushhboo,,u never said anything wrong. I read the entire interview. Many people in Tamil Nadu didnt even know what u spoke. U ask them and they may say that u spoke ''bad'' of Tamil women. When the supreme court had upheld the justice why care about these people.
Rate this:
23 நவ, 2010 - 19:39 Report Abuse
 செந்தில் குமார்.ச குஷ்பூ அவர்களே உங்களுக்கும் இரண்டு பெண் மகள்கள். இதை நீங்கள் மறக்கேவேண்டம் .......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in