கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழ் நாடு முழுவதும் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் நாசெ குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜெ.ராமச்சந்திரனின் மகன் துருவா, சினிமாவில் ஹீரோவாகி இருக்கிறார். ஆர்கிடெக் பட்டதாரியான இவர் சினிமாவில் வருவதற்காக பல பயிற்சிகளை பெற்று வந்திருக்கிறார். அறிமுகமாகும் படம் திலகர். மிருதுளா, அனுமோல் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். கண்ணன் இசை அமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பெருமாள் பிள்ளை இயக்குகிறார்.
துருவா எப்படி ஹீரோவானர் என்பது பற்றி படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் கூறியதாவது: "துருவா பாரத் பல்கலைக் கழகத்தில் பி.இ ஆர்க் படித்தவர். அதுமட்டுமல்ல யூஎஸ்ஸில் எம்.எஸ் ஆர்க் மூன்று ஆண்டுகள் படித்தவர். நல்ல வேலை லட்சக்கணக்கில் சம்பளம் என்று வந்தும் போகவில்லை. பிஸினஸிலும் ஆர்வமில்லை. அவருக்கு சினிமா மீதுதான் ஆர்வம் இருந்தது குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். அவர் பிடிவாதமாக இருந்தார்.
சினிமாவில் தாக்குப் பிடிக்க பல விஷயங்கள் தேவை. விடாமுயற்சி, பயிற்சி, சகிப்புத்தன்மை, பொறுமை போல எவ்வளவோ தேவை. அதற்காக பல சோதனைகள் வைக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் காரில் போய்க் கொண்டிருந்த அவரை வடபழனியிலிருந்து திநகருக்கு தினமும் சைக்கிளில் போகச் சொன்னார்கள். இடையில் பஸ்ஸில் ஏறக் கூடாது. இப்படி ஆறுமாதங்கள் போகச் சொன்னபோது போனார். அவரது பொறுமை புரிந்தது.
அதன் பிறகு மும்பை நடிகர் அனுபம்கெர்ரின் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஓராண்டு நடிப்புப் பயிற்சி பெற்றார். பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டண்ட் பயிற்சிபெற்றார்.ரெமோ மாஸ்டரிடம் நடனப் பயிற்சி பெற்றார்.சில காலம் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றார். இவ்வளவு சோதனைகளைத் தாண்டி தன்னைத் தகுதியுள்ளவராக வளர்த்துக் கொண்டுதான் துருவா சினிமாவுக்கு வந்திருக்கிறார். நெல்லைப் பகுதிகளில் 75 நாட்கள் படமெடுத்தோம். ஒவ்வொரு நாளும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு நடித்தார்."
இவ்வாறு தயாரிப்பாளர் மதியழகன் கூறினார்.