ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
நாகார்ஜூனா நடித்த ரட்சகன், பிரசாந்த் நடித்த ஸ்டார் உள்பட சில படங்களை இயக்கியவர் ப்ரவீன்காந்த். சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்த அவர் தற்போது புலிப்பார்வை என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். விடுதலைப்புலி பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதை லண்டனைச்சேர்ந்த சேனல் 4 அதிகாரப்பூர்வமாக வீடியோவுடன் வெளியிட்டது.
இந்த கொடிய சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் புலிப்பார்வை. இந்த கதையில் பாலசந்திரன் வேடத்தில் நடிக்க நூற்றுக்கணக்கான சிறுவர்களை அழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்த ப்ரவீன்காந்த், சத்யதேவ் என்ற 13 வயது சிறுவனை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் . மேலும் விடுதலைப்புலிகள் இந்தியாவுக்கு எதிரிகள் அல்ல என்பதை சொல்ல வரும் இந்த படத்திற்கான கதையை தயார் செய்தபோது ஒரு சென்சார் அதிகாரியையும உடன் வைத்து அப்போதே தேவையான இடங்களில் கத்தரி வைத்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணயுள்ளாராம் அவர்.
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட இப்படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஈழப்போரின்போது இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 13 வயது பாலசந்திரனின் மரணத்தை மறு விசாரணை செய்யும் ஒரு வரலாற்று பதிவாக இந்த புலிப்பார்வை படத்தை தான் இயக்கியிருப்பதாகவும் சொல்கிறார் ப்ரவீன்காந்த்.