ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திறுயாகாவாராயினும் நாகாக்க என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார். இது ஒரு திகில் படம். ஆதி, நிக்கி கல்ராணி, லட்சுமி பிரியா, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் மிதுன் சக்ரவர்த்தியை நடிக்க வைத்திருப்பது பற்றி அதன் இயக்குனர் சத்யா பிரபாஸ் கூறியதாவது:
மும்பையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒருவரின் கேரக்டரில் சக்தி மிக்க ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அப்போது மனதிற்குள் வந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. ஆனால் அவர் சினிமாவில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருப்பதாக சொன்னார்கள். கதையை கேட்டால் எப்படியும் நடிக்க ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது. தெரிந்தவர்கள் மூலம் அவரை சந்திக்க நேரம் கேட்டேன். 15 நிமிட நேரம் ஒதுக்கி கொடுத்தார்.
"தமிழ்நாட்டிலேயே நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே சினிமாவில் இருந்து விலகி இருக்கும் என்னை தேடிவந்து ஏன் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்-?" என்றுதான் முதலில் கேட்டார். முதலில் கதையை கேளுங்கள் சார் என்று கூறிவிட்டு கதை சொன்னேன். 15 நிமிடம் ஒதுக்கியவர் 45 நிமிடம் கதையை உன்னிப்பாக கேட்டார். அவர் நடிக்கும் கேரக்டர் சம்பந்தமாக சில விளக்கங்களை கேட்டு தெளிவு பெற்ற பிறகு நடிக்க சம்மதித்தார். இந்தி இயக்குனர்கள் பலர் கேட்டும் ஒத்துக் கொள்ளாமல் இருந்தவர் என் கதையை நம்பி ஒத்துக் கொண்டார். என்கிறார் சத்யா பிரபாஸ்.