ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னட இயக்குனர் மதன் பட்டேல் இயக்கி உள்ள கன்னட படம் ஒன்று சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பிரபல சாமியார் பற்றியது. பல வழக்குகள், தடைகளை தாண்டி அந்தப் படம் வெளிவந்தது. தற்போது இந்தப் படத்தை சொர்க்கம் என் கையில் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். இதற்கு தடை கேட்டு இந்து தர்மா சக்தி அமைப்பின் செயலாளர் என்.தேவசேனாபதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சொர்க்கம் என் கையில் என்ற படத்தை பெங்களூரைச் சேர்ந்த மதன்பட்டேல் என்பவர் இயக்கித் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் இந்து சன்னியாசிகள் பெண்களை மயக்குவது போன்ற அவதூறு காட்சிகள் இடம் பெற்றதுள்ளது. இந்து மதத்தில் சன்னியாசிகள் கடவுளின் தூதர்களாக கருதப்படுகிறார்கள்.
இந்தப் படம் முதலில் கன்னடத்தில் வெளிவந்தது. 2012ம் ஆண்டு கர்நாடக தணிக்கை குழு படத்துக்கு தடைவிதித்தது. தற்போது இந்தப் படத்தை சொர்க்கம் என் கையில் என்ற பெயரில் டப் செய்து அதற்கு தணிக்கை சான்றிதழும் பெற்றுள்ளனர். எனவே இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறவேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும். இந்து சன்னியாசிகளை தவறாக சித்தரிக்கும் படத்தின் இயக்குனர் மதன்பாய் பட்டேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து 2 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலாளர், திரைப்பட தணிக்கை குழு தலைவர், போலீஸ் கமிஷனர், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.