கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சென்னை அடையாறில் பிலிம் சிட்டி தொடங்கப்பட்டபோது, பல தமிழ்ப்படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெற்றது. ஆனால், பின்னர் அனைவருமே ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியை நோக்கி படையெடுத்தனர். காரணம், அங்கிருக்கும் அதிநவீனமயம் இங்கு இல்லை என்று சொன்னார்கள்.
அதனால், தமிழ்த்திரையுலகினர் சார்பில் நம்முடைய பிலிம் சிட்டியை இன்னும் நவீனப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதன் எதிரொலியாக, தற்போது அடையாறு பிலிம் சிட்டியை அதிநவீனப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா. இதனால் திரையுலகினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், இயக்குனர் சங்கத்தலைவர் டைரக்டர் விக்ரமன் நேற்று விடுத்துள்ள செய்தியில், சென்னை பிலிம் சிட்டியில் இரண்டு ஏசி ப்ளோர்கள் திறந்திருப்பது சந்தோசத்தை அளிக்கிறது. அந்த வகையில், தமிழ்த்திரையுலகினர் மீது அன்பு கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழகமெங்கும் அம்மா திரையரங்குகளையும் உடனடியாக தொடங்க வேண்டும். அப்படி திறந்தால் இன்றைக்கு தியேட்டருக்கு வர முடியாமல் கிடக்கும் ஏராளமான சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகும்.
அதன்காரணமாக தொடர்ந்து சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய தயாராவதோடு, ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்,. அதனால், அம்மா அவர்கள் அருள்கூர்ந்து தமிழகமெங்கும் அம்மா திரையரங்கங்களை உடனடியாக தொடங்கி சின்ன பட்ஜெட் படங்களை வாழ வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.