தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'கிக்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலைஞர்களுக்கும், சல்மான் கானின் பாதுகாவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சல்மான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இனி கலந்து கொண்டு புகைப்படம் எடுக்கப் போவதில்லை என புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தீர்மானித்தது. அதன் பின் சல்மான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எந்த புகைப்படக் கலைஞர்களும் புகைப்படம் எடுப்பதில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஆமீர்கான் மகள் நடத்திய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கால்பந்தாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சல்மான் கான் வந்தார். அதுவரை பல பிரமுகர்களையும், திரைக் கலைஞர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் சல்மான் கான் வந்ததும், புகைப்படம் எடுக்காமல் உட்கார்ந்துவிட்டனராம்.
இது அப்போது ஒரு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றைப் பார்த்த ஆமீர்கான் புகைப்படக் கலைஞர்களிடம் சென்று அவர்கள் தரப்பு பிரச்சனை என்ன என்பதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். மேலும், இது சம்பந்தமாக சல்மான் கானிடம் தான் பேசி சமரசம் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், புகைப்படக் கலைஞர்கள் இது தங்களது சங்கம் எடுத்த முடிவு என்றும், அடுத்து என்ன செய்யலாம் என சங்கம் சொல்வதைத்தான் தாங்களும் செய்வோம் என்று சொல்லியிருக்கின்றனர். ஆமீர்கான் இந்தப் பிரச்சனையை விரைவில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.