'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
குணசேகரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் சரித்திரப் படமான 'ருத்ரமாதேவி' படப்பிடிப்புத் தளத்தில் இருந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க நகைகள் சில தினங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. படத்தில் பயன்படுத்தப்படும் நகைகள் ஒரிஜனல் தங்கத்தால் செய்யப்பட்டவை. நகை கொள்ளை அடிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வேன் டிரைவர், நகைக் கடை ஊழியர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் மேலும் ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் நாயகியான அனுஷ்கா, மற்றொரு நாயகியான கேத்தரின் ஆகியோர் அணியும் ஆபரணங்கள்தான் கொள்ளை அடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்பு முடிந்த பின் அந்த நகைகள் மீண்டும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விடுமாம். கடந்த ஆறு கட்டப் படப்பிடிப்பு எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடந்திருக்க, ஏழாவது கட்டப் படப்பிடிப்பில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடமிருந்து நகைகள் பற்றிய தகவல்கள் கிடைத்ததா, எங்கு அவற்றைப் பதுக்கி வைத்துள்ளனர் போன்ற விவரங்களை காவல் துறை இன்னும் வெளியிடவில்லை. இந்தச் சம்பவம் தெலுங்குத் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.