ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்பாரஜின் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளி வரவிருந்தது. தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூல் பாதிக்கக் கூடாது என்பதால் ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனிடம் சொல்லி ஜிகர்தண்டா படத்தை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க செய்துவிட்டார் தனுஷ்..
இது குறித்த தகவலை தன்னிடமும், இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜிடமும் தயாரிப்பாளர் கதிரேசன் சொல்லவில்லை என்று செம கடுப்பில் இருக்கும் நடிகர் சித்தார்த் அந்த கடுப்பை ட்விட்டரில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன் ஜிகர்தண்டா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என்று தகவல் வெளியானது.
அதை மறுத்து வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ட்வீட் பண்ணியதோடு இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் அமைதியாகிவிட்டார்.
இதற்கிடையில் கார்த்திக் சுப்பாராஜுக்கு ஆதரவாகவும் தனுஷ் மற்றும் கதிரேசனுக்கு எதிராகவும் இயக்குநர்கள் பலர் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். தங்கமீன்கள் பட இயக்குநர் ராம் வெளிப்படையாகவே இது பற்றி தன் ஃபேஸ்புக்கில் கருத்தை பதிவு செய்திருக்கிறார்...
'இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கு, தங்களின் படம் “ஜிகர்தண்டா” அறிவித்த தேதியில் இருந்து (ஜீலை 25) அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போவதாக இப்போதுதான் கேள்விபட்டேன். தங்கமீன்கள் வெளிவருவதாக தினசரி இதழ்களில் விளம்பரம் வந்த தேதி ஜீலை 26, போன வருடம். ஆனால் அதுவும் தள்ளிப் போனது. இறுதியில் ஆகஸ்ட் 30ல் திரைக்கு வந்தது.
தின செய்தித்தாள்களில் தேதியிட்டு விளம்பரம் வந்தபின் ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டிகளில் சொன்ன தேதி சொன்ன நேரம் வந்து சேரும் என்று நாம் சொல்லிய பின் தேதி மாறினால் எத்தனை மனவருத்தம் ஏற்படும் என்பதையும் அது எத்தனை பெரிய சுமையாய் அழுத்தும் என்பதையும் போன வருடம் இதே நாட்களில் நான் உணர்ந்தேன். அனுபவித்தேன். ஏன் தள்ளிப் போனது என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சொல்லச் சொல்ல என்ன எரிச்சல் ஏற்படும் என்பதையும் கண்டுணர்ந்தேன்.
இன்றைய உங்களின் இரவு எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. கவலைப்படாதீர்கள், தடைகளை தாண்டி பெருகிற வெற்றி பெரிய வெற்றியாக இருக்கும். சாதனையாக மாறும். உங்களின் “பீட்சா” இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதற்கும் என் வாழ்த்துக்கள். மதுரைக்கு ஜிகர்தண்டா எப்படியோ அப்படி தமிழ் சினிமாவிற்கு உங்கள் ஜிகர்தண்டா இருக்கும் என நான் நம்புகிறேன்.
பிரியங்களுடன் ராம்.
('போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை', என்ற வார்த்தையைக் கேட்டாலே பத்திகிட்டு வருது. எப்பத்தான் மாறுமோ? )'
இவ்வாறு ராம் கூறியுள்ளார்.