டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இனம் என்ற படத்தை இயக்கி இலங்கை தமிழர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன். கேரளாவைச்சேர்ந்தவரான இவர், தமிழர்களின் உணர்வுகளை கிள்ளிப்பார்த்ததால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் இவருக்கு எதிராக போர்க்கொடி பிடித்தனர். ஆனால், தமிழ் டைரக்டரான லிங்குசாமி, இனம் ஒரு சிறந்த படம் என்று சொல்லிக்கொண்டு தமிழகமெங்கும் வெளியிட்டார். இதற்கு தமிழ் சினிமாவின் படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் பல டைரக்டர்களும் முதலில் ஆதரவுக்குரல் கொடுத்தனர்.
ஆனால் படத்துக்கு எதிர்ப்புகள் கடுமையானபோது, அதற்கு ஆதரவாக யாருமே குரல் கொடுக்கவில்லை. ஆக, படத்தை வெளியிட்ட லிங்குசாமி சிக்கிக்கொண்டார். அதாவது, இனம் படத்தை வெளியிட்டமைக்காக அடுத்தடுத்து லிங்குசாமி வெளியிடும் எந்த படத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று உலகமெங்கும் வாழும் இலங்கை தமிழர்கள் குரல் கொடுத்தனர். அதோடு, தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இந்த ஒரு படம் தனது அடுத்தடுத்து படங்களுக்கு வேட்டு வைத்து விடும் போலிருக்கே என்று உஷாரான லிங்குசாமி, உடனடியாக அந்த படத்தை தியேட்டர்களில் இருந்தே வாபஸ் பெற்றார்.
இருப்பினும், அதே சந்தோஷ் சிவனைத்தான் தனது அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவாளராக்கியிருந்தார். இந்த பிரச்னை காரணமாக அவரை படத்திலிருந்து நீக்கவில்லை. மேலும், தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள அஞ்சானின் தமிழ்ப்பதிப்பில் அவரை படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத லிங்குசாமி, தமிழுக்கும் சேர்த்து தெலுங்கு பதிப்பில் அவரை முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். ஆக, எது எப்படியோ சந்தோஷ்சிவனை பெருமைப்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை லிங்குசாமி.