இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
எனது ஊர் சுற்றி புராணம் படத்தில் நடிக்காமல் அஞ்சலியை எந்த படத்திலும் நடிக்க விட மாட்டேன் என்று செம தில்லாக பேசி வந்தார் டைரக்டர் மு.களஞ்சியம். ஆனால், இப்போது பார்த்தால், அவரது எந்த நடவடிக்கைக்கும் பயப்படாமல், தற்போது ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. அதோடு, சென்னையில் நிரந்தரமாக தங்காமல் மும்பை, கேரளத்து நடிகைகளைப்போன்று ஒரு ஸ்டார் ஹோட்டலில் முகாமிட்டுள்ளார்.
இந்த நிலையில், அஞ்சலியை இனி மிரட்டியெல்லாம் நடிக்க வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட களஞ்சியம்,. இப்போது பணிந்து போகத்தொடங்கி விட்டார். அதனால், அவரை சந்தித்து பேசி வழிக்கு கொண்டு வர தனது அபிமானிகள் சிலரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், அப்படி களஞ்சியம் தரப்பில் இருந்து சந்திக்க வருகிறார்கள் என்றதும் அஞ்சலியின் தற்போதைய செக்யூரிட்டிகள் அவரை நெருங்கவே விடவில்லையாம்.
இருப்பினும், தங்களது நிலையை சொல்லி ஒருவழியாக அஞ்சலியை சந்தித்து சமாதானம் செய்யும் வகையில் பேசினார்களாம். ஆனால் அஞ்சலி அதற்கெல்லாம் மசியவில்லையாம். அந்த படத்தில் என்னால் நடிக்கவே முடியாது என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு இப்போது நான் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்று அவர்களை விரட்டியடித்து விட்டாராம் அஞ்சலி.
இதனால் சினிமா சங்கங்கள் அனைத்தும் தன்னை கைவிட்டு விட்ட நிலையில், அடுத்து எந்த மாதிரியான முயற்சி எடுப்பது என்பது தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நிற்கிறார் களஞ்சியம்.