ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேனி வந்திருந்த இசைஞானி இளையராஜா, "எதையும் திருடி நான் இசையமைப்பதில்லை,” என்று பேசினார். தேனி மாவட்டம் லோயர்கேம்ப் குறுவனத்துப்பாலம் அருகே உள்ள இளையராஜா பங்களாவில், இசைஞானி பேன்ஸ் கிளப் கருத்தரங்கம் நடந்தது. அதில் இளையராஜா பேசியதாவது: தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இசைஞானி பேன்ஸ் கிளப் மூலம் எல்லோரும் மனதால் இணைந்துள்ளோம். மனது சுத்தமாக இருக்கும்போது சாக்கடையில் நடந்தால் கூட அது சுத்தமாகி விடும். எதையும் திருடி நான் இசை அமைப்பதில்லை. அந்த நேரத்தில் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதைத்தான் இசையில் கொண்டு வருகிறேன்.
நான் இசை அமைத்த 40 ஆண்டுகளில் எனது இசை இல்லையென்றால் அந்த இடம் பூஜ்யம்தான். இசைக்காக பல முறை 24 மணி நேரமும் தூங்காமல் வேலை பார்த்தேன். அவ்வாறு சிரமப்பட்டு இசையமைத்த பாடல்களை இன்டர்நெட் மூலம் பதிவிறக்கம் செய்து கேட்பது நான் அடைந்த சிரமத்திற்கு பயனில்லாமல் போய் விடுகிறது. அதனால் அனைவரும் எனது பாடல்களை சிடி வாங்கி கேட்பார்களேயானால், புதிய ஆல்பம் உடனுக்குடன் தயார் செய்து வெளியிட தயாராக உள்ளேன், என்றார்.