சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
நாடோடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனன்யா. தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் , சீடன் படத்திற்கு பிறகு திருமண சர்ச்சைகளால் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர், புலிவால் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
சமீபத்தில் நந்தாவுடன் அதிதி படத்தில் நடித்தார், படத்தின் வில்லனும், அதன் தயாரிப்பாளரும் சில தினகளுக்கு முன் அனன்யா பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்திற்கு வருவது கிடையாது, அவரால் ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் என்றெல்லாம் கூறினார். அந்த செய்தி பற்றி அனன்யாவிடம் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள கேட்டோம், அதற்கு அனன்யாவே பதிலளித்தார்... நாம் கேள்வி கேட்கும் முன்பே அவரே கொட்டி தீர்த்து விட்டார், அதை அப்படியே இங்கு எழுதி உள்ளோம்.
வருத்தமளிக்கிறது...
கிட்டத்தட்ட எனக்கு அதிதி படம் 45 வது படம் , நான் ஒன்றும் புதுமுகம் அல்ல, என் மீது அவர் குற்றம் சாட் டி உள்ளது வருத்தம் தான், படம் ஆரம்பிப்பதற்கு இரண்டு நாள் முன்னாடி ஆர்டிஸ்ட் வருவாங்க, டிரஸ் மேக் அப் எல்லாம் டிஸ்கஸ் பண்ணுவாங்க, அடுத்த நாள் ஷூட்டிங் ஆரம்பமாகும், இது தான் எப்போதும் சினிமாவில் நடக்கும், ஆனால் அதிதி படம் ஆர்ம்பிக்க கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆனது, இதனால் ரூமிலேயே இருந்தேன்,லோகேசன் கிடைக்கவில்லை, அது இல்லை, இது இல்லை என்று எனது நேரத்தை வீண் அடித்தார்கள். அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சு இவங்க பிளானிங் எதுவும் சரி இல்லை என்று, இருந்தாலும் பொறுமையாகவே நடித்தேன்.
இரண்டாவதாக எனக்கு சில பேரை தவிர்க்க வேண்டிய சூழல் இருந்தது, அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தால் வந்த வேலை பாதிக்கும், அதனால் வடபழனி ஹோட்டல் வேணாம், நான் புலிவால் படத்துக்கு எந்த ஹோட்டலில் தங்கினேனோ, அங்கேயே ரூம் கேட்டேன், வாடகை அதிகம் என்றார்கள், அப்ப கூட நான் உங்களோடு வாடகையை ஷேர் பண்ணிக்கிறேன், வேறு எந்த பேமென்ட்டிலாவது நான் கழித்து கொள்கிறேன் என்று சொன்னேன். சிலவற்றை நானே பார்த்து கொண்டேன், குறிப்பாக நான் கேரளாவில் இருந்து இங்கு வந்தபோது எனது காரைத் தான் பயன்படுத்தி வந்தேன்.
அடுத்தவர்கள் பணம் எனக்கு எதுக்கு...?
அடுத்து, படத்திற்கு ஒப்பந்தம் போடும்போதே, எனக்கு கென்யாவில் ஒரு நிகழ்ச்சி இருக்கு, சரியான தேதிக்குள் படத்தை எடுத்து என்னை அனுப்பிவிட வேண்டும் என்று சொன்னேன். 35 நாள் கொடுத்த கால்ஷீட்டை கிட்டத்தட்ட 54 நாளாக ஆகிட்டாங்க, இதுப்பற்றி அவர்களிடம் கேட்டப்போ, அந்த பணத்தை நான் தந்துவிடுகிறேன் என தயாரிப்பாளர் சொன்னாரு, ஆனா 1 ரூபாய் கூட கொடுக்கல, இது தான் நிஜம். நான் சம்பாதிக்கிறேன், என் கணவர் சம்பாதிக்கிறார், அடுத்தவங்க பணம் எனக்கு எதுக்கு, அந்த பணத்தை வாங்கி கொண்டு நான் நிம்மதியாக தூங்க முடியுமா, பணம் கொடுக்காமலே தயாரிப்பாளர் எப்படி இப்படி கண்ணீர் விடுவாரு என்று எனக்கு தெரியல.
பணம் போச்சு, மானம் போச்சு...
இந்த மாதிரி புகார் இருந்தால் எப்போது சொல்லியிருக்கணும், படம் ரிலீஸ்க்கு முன்னாடி சொல்லணும், படம் ரிலீஸ் பண்ணி இவ்ளோ நாள் கழித்து சொல்றார், அது ஏன்? இவர் படத்தில் இனி அடுத்து எந்த நடிகர்கள் நடிப்பாங்க, இதை பற்றி அவர்கிட்ட பேசலாம் என்று போன் பண்ணினால் அவர் போனை எடுக்கவே இல்லை. இவரால் எனக்கு பணம் போச்சு, மானம் போச்சு நடிகைன்னா வேறு எந்த கமிட்மென்ட்டும் இருக்காதா? எல்லாவற்றுக்கு குறை சொன்னால் எப்படி, எதிலும் ஒரு திட்டமிடல் இருக்கணும், இசை வெளியீடு என்று இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் சொல்றாங்க, அப்போது துபாயில் மலையாள படம் ஷூட்டிங்கில் இருந்தேன், ஷூட்டிங்கிற்கு முன்னாடியே டேட்ஸ் கொடுத்தது, ஷூட்டிங்கை விட்டுவிட்டு வரமுடியவில்லை. பிறகு படம் ரிலீஸ் என்று அதையும் இரண்டு நாட்களுக்கு முன்னாடி தான் சொன்னாங்க,அந்த தேதியில், என் தம்பி மற்றும் உறவினர்கள் கல்யாணம்,எப்படி நான் முடிவு எடுக்கிறது சொல்லுங்க. இப்படி எல்லாமே அவர்மேல் தவறை வைத்துக்கொண்டு அடுத்தவர்கள் மீது எப்படி குற்றம் சொல்ல முடியும், எனக்கு இந்த மாதிரி பப்ளிசிட்டி வேண்டாம்.
எனக்கு மறைத்து பேச தெரியாது
ஷூட்டிங்கில் கூட என்னை ரொம்ப சங்கடப்படுற மாதிரி பேசுவார். அதிதி கதை எனக்கு பிடித்ததால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இயக்குனர் ரொம்ப நல்லவர், மேலும் மலையாளத்தில் ஜெயசூர்யா - அனுப்மோகன் நடித்தது. வில்லன் ரோலில் இவர் தான் நடிக்கிறார் என்று கடைசி வரை சொல்லவே இல்லை, யாரோ கூத்துப்பட்டறை புதுமுகம் ஒருவர் நடிப்பதாக சொன்னார். எங்கு இவர் நடிக்கிறார் என்று சொன்னால் நான் நடிக்க மாட்டேனோ என்ற பயம் வேறு அவர்களுக்கு. மேலும் நடிக்கும் போது ஏதாவது குறை சொல்லி கொண்டே இருப்பார். நான் நடிப்பில் தவறு செய்தால் இயக்குனர் சொல்லட்டும், இவர் யார் எனக்கு நடிப்பு சொல்லி கொடுக்க. நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் தைரியமாக இருக்கேன், எதுவாக இருந்தாலும் மறைத்து பேச எனக்கு தெரியாது. சினிமா என் உயிர், மலையாளத்தில் 100 டிகிரி செல்சியஸ் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
என் மேல் நம்பிக்கை இருந்தால் படம் கொடுங்கள்
தயாரிப்பாளர்களுக்கு ஒன்று சொல்கிறேன், நான் நன்றாக தமிழ் பேசுபவள், என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படம் கொடுங்கள், வீண் வதந்திகளை நம்பாதீர்கள், என்று மூச்சு இறைக்க பேசி முடித்தவர், விரைவில் சென்னையில் சந்திப்பதாக கூறினார் அனன்யா.