'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஷாரூக்கான், இயக்குனர் ரோகித் ஷெட்டி மீண்டும் இணைய உள்ளனர். இந்த படத்தில் ஷாரூக் ஜோடியாக காத்ரீனா கைப் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் ஷெட்டி தற்போது அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கும் 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு ரோகித் , ஷாரூக் இணையும் படத்தின் வேலைகள் ஆரம்பமாக உள்ளன.
'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் வெற்றி இந்தக் கூட்டணியைப் பற்றி மேலும் பேச வைத்து விட்டது. காத்ரீனா கைப்பும் இந்தக் கூட்டணியில் சேரும் பட்சத்தில் இந்தப் படமும் நிச்சயம் 100 கோடி வசூல் படமாக இருக்கும் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷாரூக் கான், காத்ரீனா கைப் இருவரும் யாஷ் சோப்ரா கடைசியாக இயக்கிய 'ஜப் தக் ஹை ஜான்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன் பிறகு இப்போதுதான் ஜோடி சேர உள்ளனர். ரோகித், ஷாரூக், காத்ரீனா கூட்டணி இணைந்தால் ஒரு மிகப் பெரிய கமர்ஷியல் வெற்றி உறுதி என இப்போதே ஆரூடம் சொல்கிறார்கள். அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்த பின் சில வாரங்களுக்குள் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.