இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
இந்தி சினிமாவில் நடித்த சில ஆண்டுகளிலேயே ஏராளமான ரசிகர்களை தன்னகத்தே இழுத்தார் சன்னிலியோன். அதற்கு காரணம், அவரது நடிப்பு அல்ல, கவர்ச்சி. ஏற்கனவே இந்தி சினிமா கதாநாயகிகள் கவர்ச்சியை தூக்கலாகவே வெளிப்படுத்துவார்கள். என்றபோதும், சன்னி அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு துகிலுரிந்து நின்றார்.
இந்த நிலையில், தற்போது தென்னிந்திய படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ள சன்னிலியோன், இந்திய அளவில் தான் ஒரு தனிப்பெரும்பான்மை கொண்ட நடிகையாக திகழவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதனால் தற்போதைக்கு தென்னிந்தியாவில் குத்துப்பாட்டு நடிகையாக நடித்தபோதும், அடுத்து ஹீரோயினியாக நடிக்க முயற்சி எடுக்கவும் திட்டம் வைத்துள்ளார்.
ஆனால், வெறும் கிளாமரை மட்டுமே முன்வைத்து ரொம்ப நாளைக்கு காலம் தள்ள முடியாது என்று இப்போது நினைத்து விட்ட சன்னிலியோன், தற்போது என் கைவசமுள்ள படங்களை முடித்த பிறகு, கிளாமர் அல்லாத கதைகளாக செலக்ட் பண்ணி நடிப்பேன் என்று ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் அவர்.இதனால், பாலிவுட் வட்டாரஙகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறதாம்.
குறிப்பாக, சன்னிலியோனின் கவர்ச்சிக்காக அவரது ரசிகர்களாக மாறிய பெரும்பாலான ரசிகர்கள், இந்த திடீர் கொள்கையை மாற்றி விட்டு, எங்களது கவர்ச்சி குயினாக தெடர்ந்து சினிமாவில் வலம் வர வேண்டும் என்று இணையதளங்கள் வாயிலாக சன்னி லியோனுக்கு அவசர செய்திகளை அனுப்பி விட்டு வருகிறார்களாம். ஆனால். இதுகுறித்து இன்னமும் சன்னி லியோன் எந்த மாற்று செய்தியும அறிவிக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் திக் திக் மனநிலையுடன் காணப்படுகிறார்களாம்.