டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆடுகளம் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த படங்கள் அவருக்கு அதிர்ச்சி தோல்விகளாக அமைந்தன. அதனால் ஒரு மாற்றத்துக்காக இந்தி படத்தில் நடிக்க சென்றார். ஆனால், தமிழில் கிடைக்காத வெற்றியை ராஞ்சனா படம் அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அப்படம் 100 கோடியை வசூலித்ததால் பாலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகரானார் தனுஷ்.
அதனால் இனிமேல் தனுஷின் மொத்த கவனமும் இந்திக்கு திரும்பி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ, இன்னும் 10 வருடத்திற்கு பிறகுதான் இந்தியில் முழுசாக இறங்குவேன். அதுவரைக்கும் தமிழில் எனக்குரிய இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வேன் என்று ஒரே நேரத்தில் வேலையில்லா பட்டதாரி, அனேகன், வெற்றிமாறன் இயக்கும் படம் என பல படங்களில் கமிட்டானார்.
அப்படி அவர் நடித்த படங்களில் வேலையில்லா பட்டதாரி தற்போது திரைக்கு வந்திருக்கிறது முதல் நாள் கலெக்சன் திருப்திகரமாக உள்ளதாம். பல தியேடடர்களில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறதாம். இதனால் மயக்கம் என்ன, 3, மரியான் என தான் நடித்த படங்களின் வெளியானபோது தியேட்டர்களில் காத்து வாங்கியதால் கலங்கிப்போய் நின்ற தனுஷ், இப்போது உற்சாகமடைந்திருக்கிறார்.
இதனால் இந்த படத்தை எப்படியாவது 100 நாள் படமாக்கி விட வேண்டும் என்று நினைக்கும் அவர், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருபவர், நீங்கள் கொடுத்த இந்த வெற்றி என்னை ரீ-சார்ஜ் பண்ணியுள்ளது. சந்தோசத்தில் கண்கள் கண்ணீர் வடிக்கிறது. அதனால் எனது கண்ணீரை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்று ஆத்மார்த்தமாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.