மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
அட்டகத்தி ஐஸ்வர்யா இப்போது பிசியான நடிகை. பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு பிறகு அவரது கேரியர் உயர்ந்திருக்கிறது. ஐஸ்வர்யா பிரபலமாவதற்கு முன்பு விளம்பரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஹீரோவாக ராமானுஜன் படத்தில் நடித்த சாவித்ரி, ஜெமினி கணேசன் பேரன் அபிநவ் நடித்திருக்கிறார். இன்னொரு ஹீரோயினும் நடித்துள்ளார். ராமானுஜன் படத்திற்கு பிறகு அபிநவ் இந்த படத்தில் நடித்தது பற்றி வாயே திறப்பதில்லை. ராமானுஜன்தான் என் முதல் படம் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
விளம்பரம் படத்தில் நடித்த இருவரும் பிரபலமாகிவிட்டதால் இப்போது படத்தை எடுத்து கிடப்பில் போட்டிருந்தவர்கள் அதனை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ராமானுஜன் புகழ் அபிநவ், அட்டக்கத்தி புகழ் ஐஸ்வர்யா நடிக்கும் என்ற நகர் முழுவதும் இருவர் படத்துடன் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். இதனால் இருவருமே கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறும்போது: நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடித்த படம். அதுவும் நான் ஹீரோயின் இல்லை. ஒரு டான்சராக சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறேன். இப்போது எனக்கிருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடுகிறார்கள். இப்போது நான் அட்டகத்தி தினேசுடன் திருடன் போலீஸ் படத்திலும், விஜய் சேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்து வருகிறேன். என்கிறார் ஐஸ்வர்யா.