பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களில் வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றிக்கொண்டு திரியும் வேடத்தில்தான் நடித்திருக்கிறார். குறிப்பாக, பொல்லாதவன், படிக்காதவன், யாரடி நீ மோகினி போன்ற படங்களில் அவருக்கு அப்பாக நடித்திருந்த ரகுவரன், கே.விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் அவரை தண்டச்சோறு என்றுதான் அழைப்பார்கள்.
அந்தவகையில் அப்பாக்களுக்கு அவரைக்கண்டாலே ஆகாது. அம்மாக்கள்தான் தனுஷை அரவணைத்து செல்வார்கள், அதேபோல்தான், தற்போது தனுஷ் நடித்து வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்திலும் வார்த்தைக்கு வார்த்தை அப்பா சமுத்திரக்கனி தண்டச்சோறு என்று சொல்லும் வேடத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.
கதைப்படி தனுசுக்கு அப்பாவாக நடித்திருக்கும் டைரக்டர் சமுத்திரகனி, முதல் காட்சியில் முதல் டயலாக்கே தூங்கிக்கொண்டிருககும் தனுஷை ஏய் உருப்படாதவனே எழும்புடா என்றுதான் சொல்வார். அதிலிருந்தே படித்து விட்டு வேலை வெட்டி இல்லாமல் சுற்றும் தனுஷை தண்டச்சோறு தண்டச்சோறு என்று சீன் பை சீன் திட்டித்தீர்ப்பார் சமுத்திரகனி.
ஆனால், இப்படி அப்பா கேரக்டர் தன்னை திட்டித்தீர்க்கும் படங்கள் எல்லாமே தனக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததால், இந்த மாதிரி வசனங்கள வேண்டும் என்று கேட்டே வாங்கினாராம் தனுஷ். ஆக, வேலையில்லா பட்டதாரி படத்தில் சமுத்திரகனி வார்த்தைக்கு வார்த்தை திட்டியது மட்டுமின்றி, அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா, தனுஷை ஒரு காட்சியில் கன்னத்தில் அறைந்தது மட்டுமின்றி, இன்னொரு காட்சியில் துடப்பக்கட்டையால் பின்னி எடுத்திருக்கிறார். ஆக, இப்படம் சூப்பர் ஹிட்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முழு நம்பிக்கையில் இருக்கிறார் தனுஷ்.