'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
திரைப்படங்களில் வில்லனாவும், கேரக்டர் ரோல்களிலும் நடித்து வந்த ஆர்யன் விஷயம் வெளியில தெரியக்கூடாது என்ற படத்தில் ஹீரோவாகி இருக்கிறார். இரண்டாவது ஹீரோவாக செண்ட்ராயன் நடிக்கிறார். ஆர்யன் ஜோடியாக அமிதா என்ற புதுமுகம் நடிக்கிறார். "ஊரை ஏமாற்றி பிழைக்கிற நான்கு நண்பர்கள் பற்றிய கதை. ஆர்யன், செண்ட்ராயன், குபேரன், ரங்கள், அம்பா சங்கர் ஆகியோர் அந்த நண்பர்கள். உழைக்காமல் பணக்காரார்களாக ஆக நினைக்கும் இவர்கள் இன்றைய தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படி மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை சொல்லி, இவர்கள் எப்படி திருந்துகிறார்கள் என்று முடிவு சொல்கிறோம். பல பிரபல ஹீரோக்களிடம் கதை சொல்லியும் அவர்கள் நடிக்க தயங்கியதால் கதையை நம்பி ஆர்யனை ஹீரோவாக்கி இருக்கிறேன்" என்கிறார் இயக்குனர் ராகவேந்திரா.