Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எந்திரன் 2 உருவாவது உறுதி: ஆமீர்கான் வில்லன்

17 ஜூலை, 2014 - 09:51 IST
எழுத்தின் அளவு:

தற்போது ரஜினி லிங்கா படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் ஐ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்து இருவரும் எந்திரன் இரண்டாம் பாகத்தில் இணையப் போகிறார்கள் என்ற செய்தி அவ்வப்போது வந்து போகும். இப்போது அந்த செய்திகள் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.


எந்திரன் முடித்த போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டையும் முடித்துவிட்டார் ஷங்கர். அதை ரஜினியிடம் காட்டியபோது இப்போது என்னுடைய உடல் நிலையை பார்க்கும்போது இதனை செய்ய முடியாது என்று கூறி தவிர்த்திருக்கிறார். இதனால் ஷங்கர் ஹீரோ எந்திரனை புத்திசாலியாகவும், வில்லன் எந்திரனை செயல்பாடுகள் நிறைந்த முரடனாகவும் ஸ்கிரிப்டை மாற்றினார். "நீங்க விநாயகர் மாதிரி உட்கார்ந்த இடத்திலேயே உங்க ஸ்டைல்ல காய் நகர்த்த்துறீங்க வில்லன்தான் ஓடியாடி உங்களை வெல்ல பார்க்கிறார். அதிக வேலை வில்லனுக்குத்தான்" என்று மாற்றி கதை சொன்னதும் "அப்படிப்பட்ட பவர்புல் வில்லன் யார்? என்று கேட்டதும் ஆமீர்கான்று சொல்லியிருக்கிறார் ஷங்கர்.


"சூப்பர்... சூப்பர் அவர்கிட்ட ஓகே வாங்கிட்டு வாங்க ஆரம்பிச்சிடலாம்" என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார். அமீர்கானுக்கு ஸ்கிரிப்ட் சென்றது. முழுவதும் படித்து பார்த்த ஆமீர் "ரஜினியோட ஒரு சீன் நடிச்சாலே பெருமைதான். நீங்க முழு படத்துக்கும் கூப்புடுறீங்க டபுள் ஓகே" என்று கூறிவிட்டாராம்.



எந்திரனுக்கு இடையில் பணக் கஷ்டம் வந்து கைமாறின மாதிரியான நிலை இதற்கு வந்துவிடக்கூடாது என்ற கருதி உட்கார்ந்து கணக்கு போட்டு பார்த்ததில் பட்ஜெட் 300 கோடியை எட்டியதாம். தெற்கிற்கு ரஜினி, வடக்கிற்கு ஆமீர்கான். தெற்கத்தி டாப் ஹீரோயின் ஒருவர் வடக்கத்தி டாப் ஹீரோயின் ஒருவர், இரு பவர்புல் வில்லன்கள். ஆங்கிலம் தவிர்த்து 6 மொழிகள் என மெகா பட்ஜெட்டை சமர்ப்பிக்க அந்த பெரிய கார்பரேட் நிறுவனத்தின் போர்ட் மீட்டிங்கில் 300 கோடி பட்ஜெட் பாசாகி விட்டதாம்.



படத்திற்கு இசை -ஏ.ஆர்.ரகுமன் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒளிப்பதிவாளர்கள் இருவர். காட்சி படப்பிடிப்புக்கு ஒருவர். டெக்னிக்கல் சைடுக்கு ஒருவர். உலகின் நம்பர் ஒண் அனிமேஷன் நிறுவனம் டெக்னிக்கல் வேலையை செய்யப் போகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகப் போகும் படம். உலக அரங்கில் இந்திய சினிமாவின் விஸ்வரூபத்தை காட்டப்போகிற படம் என்கிற வகையில் இப்போதே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது.



எந்த தகவலையும் சம்பந்தப்பட்டவர்கள் உறுதிபடுத்தவில்லை. லிங்காவும், ஐ யும் வெளிவந்த பிறகு ஷங்கர், ரஜினி, ஆமீர்கான் இணைந்து மும்பையில் இதை பிரமாண்டமாக அறிவிக்கப்போகிறார்கள். அப்படி அறிவிக்கும்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்திருக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in