பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ முதல்வர் ஜெயலிலிதா சட்டசபை மானியக் கோரிக்கையின் போது தமிழ் திரைப்டத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக தரமணி டாக்டர் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் 15 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரண்டு ஏசி படப்பிடிப்பு அரங்கம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் தொடர்ந்து சினிமாத்துறைக்கு பல சலுகைளை அளித்து வருகிறார். அவர் மூன்றாவது முறை முதல்வரானதும் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவினார். தற்போது திரைப்பட நகரில் இரண்டு புதிய அரங்குகள் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் இது கலையுலகத்திற்கு உரிய நேரத்தில் செய்யப்படும் உதவியாகும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றை பரிசீலனை செய்து சட்டசபையில் எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு படப்பிடிப்பு அரங்குகள் திறப்பதாக அறிவிப்பு செய்த தமிழக முதல்வருக்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.