நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
சினிமா தற்போது தியேட்டர்கள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள், சிடிக்கள், செல்போன்கள் வாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தியேட்டர் தொலைக்காட்சி தவிர படத்தின் தயாரிப்பாளருக்கு வேறு எந்த வகையிலும் லாபம் இல்லை. தொலைக்காட்சிகள் சிறு பட்ஜெட் படங்களை மலிவான விலைக்கு கேட்கின்றன. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் இரண்டு நாளில் தூக்கி விடுகிறார்கள். மேலும் படங்கள் வெளியான அன்றே திருட்டு விசிடிக்களும் வெளியாகி விடுகின்றன. இதனால் படத்தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் சேரன் திரைப்படங்களை மக்களின் வீட்டிற்கே டெலிவரி செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறார். இதற்காக ஒரு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் அதற்கு சி டூ எச் என்று பெயர் வைத்திருக்கிறார். அதாவது சினிமா டூ ஹோம் என்பது அதன் விரிவாக்கம். இந்த நிறுவனத்தின் அறிமுக விழா நேற்று (14ந் தேதி) மாலை 6 மணிக்கு, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.
அதாவது, சி2எச் நிறுவனம் ஒவ்வொரு திரைப்படங்களையும், திரையரங்கம் அல்லாமல் டிவிடி, புளூரே, கேபிள், செட் பாக்ஸ், டிடிஎச், ஆன்லைன், சாட்டிலைட் நெட்வோர்க் என
தளங்களில் வெளியிடுகிறது. உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும். ஒவ்வொரு சேவைக்கும், ஒவ்வொரு நாட்டிற்கும் தகுந்தவாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் டிவிடி விற்பைன செய்யும் அனைத்து வியாபாரிகளும் இந்த அழைப்பை ஏற்று இனி வரும் படங்கைள முறையாக அனுமதி வாங்கி வியாபாரம் செய்யுங்கள் என சி2எச் நிறுவனம் சொல்கிறது...!
இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், கே.எஸ்.ரவிக்குமார், ராம், தங்கர்பச்சான், அமீர், ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.