மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
'ஆடுகளம்' படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் வந்த தமிழ்ப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தெலுங்கில் இன்னமும் முன்னணி நடிகையாகத்தான் இருந்து வருகிறார். தற்போது தமிழில் 'வை ராஜா வை, முனி -3' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவ்வவ்போது ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருவது இவருடைய வழக்கம். அப்படித்தான் சமீபத்தில் திருமணமான நடிகைகளை அதன் பின் நாயகியாக நடிக்க வைக்க மறுப்பது இந்தியத் திரையுலகின் சாபக்கேடு என்று கருத்து சொல்லியிருக்கிறார்.
“ஒரு நடிகைக்கு திருமணம் ஆனாலோ அல்லது அவர்கள் 30 அல்லது 40 வயதைக் கடந்தாலே இங்கு அப்படியே வாய்ப்பு தராமல் ஓரம் கட்டி விடுகிறார்கள். ஆனால், ஹாலிவுட்டில் 40, 50 வயதிலும் ரொமான்டிக் காட்சிகளில் அங்குள்ள நடிகைகள் நடிக்கிறார்கள். இது இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சாபக்கேடு. திருமணமான பின் ஒரு நடிகையால் காதல் காட்சிகள் நடிக்க முடியாதா என்ன ?. அதன் பின், முத்தக் காட்சியில் நடிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்களுக்க அக்கா வேடமோ, அல்லது அண்ணி வேடமோ கொடுப்பது முறையல்ல. நான் திருமணமான பின்னும் தொடர்ந்து நடிப்பேன், எனது கடைசி மூச்சு உள்ள வரை நடித்துக் கொண்டுதானிருப்பேன். முதலில், திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிடலாம் என்றிருந்தேன். ஆனால், தற்போது எனது எண்ணத்தை மாற்றிவிட்டேன். திரையுலகத்தைச் சேர்ந்த யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வீட்டிலாவது சினிமா வாசனை இல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன், ” என்கிறார் இந்த வெள்ளாவியில் வெளுத்த அழகி.