டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே தயாரிப்பாளர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. காரணம், பத்து படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் ஓடுவதே அரிதாகி விட்டது. அப்படியே ஓடும் படம் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிப்பதில்லை. அதனால்தான் அந்த படத்தை வெற்றிப்படமாக காட்டிக்கொள்ள தியேட்டருக்கு வந்து 3வது நாளிலேயே சக்சஸ் பிரஸ்மீட் வைத்து வெற்றி பெற்றது போன்று பப்ளிசிட்டி செய்து கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரும்பாலான படங்கள் கையை கடித்து வருவதால், நீண்டகாலமாக படம் தயாரித்து வந்தவர்கள்கூட இப்போது படம் தயாரிப்பதில் இருந்து விலகி விட்டனர். அதனால்தான் சில முன்னணி ஹீரோக்களும், டைரக்டர்களும் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி விட்டனர். அந்த பட்டியலில், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், தனுஷ், விஷால், ஆர்யா உள்பட பலர் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி விட்டனர்.
இந்த பட்டியலில் இப்போது செல்வராகவனும் இணைந்துள்ளார். ஆர்யா-அனுஷ்கா நடித்த இரண்டாம் உலகம் படத்தை அடுத்து அதே நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கப்போவதாக முன்பு சொன்னார். அதனால் சிம்பு-த்ரிஷாவை வைத்து அந்த படத்தை இயக்கப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு கூறி வந்தார்.
ஆனால், இரண்டாம் உலகம் படம் பெரும் நஷ்டத்தை கொடுத்து விட்டதால், அப்படத்தை தயாரித்த நிறுவனம் பின் வாங்கி விட்டது. அதனால், வேறு தயாரிப்பாளர் தேடி அலைந்து கொண்டிருந்த செல்வராகவனுக்கு யாரும் சிக்காததால், இப்போது தனது அடுத்த படத்துக்கு அவரே தயாரிப்பாளராகி விட்டார். அந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம். கதை விவாதத்தை மட்டும் தற்போது நடத்தி வருகிறார் செல்வராகவன்.