தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன் 'ஐஸ் க்ரீம்' என்ற தெலுங்குப் படம் வெளிவந்தது. ஏற்கெனவே பத்திரிகையாளர்களை ஒரு விழாவில் அவமரியாதையாகப் பேசிய வர்மா, இப்போது அவருடைய படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் வந்துள்ளதால் விமர்சனம் எழுதுபவர்களை 'நாய்' என்றெல்லாம் கேவலமாக எழுதி பத்திரிகையாளர்களின் கடுமையான கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இதனால் தெலுங்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ராம் கோபால் வர்மா இயக்கி கடைசியாக வெளிவந்த சில படங்களைப் போலவே 'ஐஸ் க்ரீம்' படத்திற்கும் மிகப் பெரிய வரவேற்பு இல்லையாம். அதோடு, வெளிவந்த விமர்சனங்களும் படத்தைக் கடுமையாகக் குறை கூறியிருந்ததால் ராம் கோபால் வர்மா வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். அதைத் தொடர்ந்து அவருடைய சமூக வலைத்தளத்தில் விமர்சகர்களைக் குறை கூறியிருக்கிறார்.
“என் படத்திற்கு விமர்சனம் எழுதியவர்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். அவர்கள் என்னுடன் வெளிப்படையான விவாதம் ஒன்றில் பங்கேற்க வருவார்களா ?. பெரும்பாலான விமர்சகர்களுக்கு ஒரு காமிராவின் தலை முதல் கால் வரை எதுவுமே தெரியாது. அப்படி என்னுடன் யாரும் விவாதத்தில் ஈடுபட வரவில்லையென்றால், அவர்கள் இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டும் குறைக்கும் நாய்கள் போன்றவர்கள்தான். ஒரு படத்தை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. ஐஸ் க்ரீம் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும் போது படம்வெளியான முதல் நாளன்றே லாபத்தை சம்பாதித்துவிட்டது.
இந்தப் படத்தில் 'ஃபிளோ கேம், ஃபிளோ சவுன்ட்' ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளேன். எதிர்காலலத்தில் இந்த தொழில்நுட்பங்களால் மாற்று சினிமா உருவாக வாய்ப்புள்ளது. ஒரே ஒரு அரங்கில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தின் முதல் நாள் வசூலைப் பார்த்து விமர்சகர்கள் பொறமைப்பட்டுவிட்டனர்,” எனத் தெரிவித்துள்ளார்.