தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யாவின் படங்களுக்கு ஆந்திராவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இங்கு சுமாராக போன படங்கள் கூட தெலுங்கில் மிகுந்த வரவேற்பை பெருகின்றன. உதாரணத்திற்கு மாற்றான் படம் தமிழ்நாட்டைவிட ஆந்திராவில் நன்றாக ஓடியது. சூர்யா படங்களுக்கான ஆந்திர உரிமை 25 கோடி வரை செல்கிறது. இதனால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் சூர்யாவை நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். இதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டார். விரைவில் அவர் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.
இதுகுறித்து சூர்யா கூறியிருப்பதாவது: தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பது அந்த மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடன். என்னுடைய படங்களுக்கு அவர்கள் அளித்து வரும் ஆதரவு மகத்தானது. எனது டப்பிங் படங்களை நேரடி படங்கள் போன்று ரசித்துப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நேரடியாக ஒரு படம் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. ஓகே சொல்லிவிட்டேன். ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார் சூர்யா.