ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமே இருந்தபோது விளையாட்டுப்பிள்ளையாகத்தான் இருந்தார் விஷால். சினிமா விழாக்களுக்கு இவருடன், ஆர்யா, ஜீவா, விஷ்ணு, ஜித்தன் ரமேஷ், சாந்தனு, விக்ராந்த் என் இளவட்ட நடிகர்கள் சேர்ந்து கொண்டால் போதும், அந்த விழா முடிகிற வரைக்கும் மேடையில் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் மற்றவர்களெல்லாம் ஒருகட்டத்தில் அடங்கினாலும், விஷால்-ஆர்யா இருவருமே அடங்கமாட்டார்கள்.
ஆனால், அப்படி தீராத விளையாட்டுப்பிள்ளையாக கோலிவுட்டில் வலம் வந்த விஷால், பாண்டியநாடு படத்தில் தயாரிப்பாளராக உருவெடுத்த பிறகு அடியோடு மாறிவிட்டார். படப்பிடிப்பு தளத்தில் கேமரா முன்பு நடித்துக்கொண்டிருந்தாலும், அவ்வப்போது புரொடக்சன் சைடிலும் வந்து, புரொடக்சன் மானேஜருடன் சேர்ந்து கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். விளைவு, இப்போது எந்த நேரமும் சீரியசாகவே காணப்படுகிறார் விஷால்.
இந்த நிலையில், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் படங்களை அடுத்து ஹரி இயக்கும் பூஜை படத்தையும் தற்போது தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அவ்வப்போது சின்னச்சின்ன விபத்துக்களை சந்தித்தாலும், தான் ஒருநாள் படப்பிடிப்புக்கு லீவு போட்டாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பல லட்சங்கள் விரயமாகி விடும் என்பதால் வலிகளையும் பொறுத்துக்கொண்டு நடித்து வருகிறார் விஷால்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் காரைக்குடியில் இருந்தபோது, அங்குள்ள ஒரு கேபிள் டிவியில் சமீபத்தில் திரைக்கு வந்த பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில், ஜெய் நடித்த வடகறி ஆகிய படங்கள் ஒளிபரப்பானதை பார்த்த விஷாலுக்கு பெருத்த அதிர்ச்சியாம். இப்படி தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே கேபிள் டிவிக்களில் வந்து விட்டால் மக்கள் எப்படி தியேட்டர் பக்கம் செல்வார்கள் என்று வரிந்து கட்டியவர். உடனடியாக அந்த ஏரியா காவல் நிலையத்துக்கு சென்று புகார் செய்தாராம். அதையடுத்து சம்பந்தப்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டரை போலீசார் கடுமையாக தண்டித்தார்களாம்.
விஷாலின் இந்த முயற்சியை கேள்விப்பட்ட கோலிவுட்டின் தயாரிப்பாளர்கள் அவருக்கு போன் போட்டு பாராட்டினார்களாம்.