‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
சமீபகாலமாக நாட்டில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகள் எப்போதுமே பாதுகாப்பு வளையத்திற்குள்தான் இருக்கின்றன. அதனால் அங்கு சென்று வரும் நபர்கள், போலீசாரின் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதிலும், யார் மீதாவது சந்தேகம் வந்து விட்டால் அவர்களை துருவி துருவி விசாரித்த பின்னரே விடுவிக்கின்றனர். இப்படிப்பட்ட கெடுபிடியில் நேற்று நடிகை த்ரிஷாவும் போலீசாரின் விசாரணைக்குள் சிக்கியிருக்கிறார். அதாவது, நேற்றைய தினம் ஐதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார் த்ரிஷா.
அப்போது, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்திருந்த த்ரிஷா பெரிய அளவில் ஒரு கூலிங் கிளாஸ் கண்ணாடியை அணிந்திருந்தாராம். இதனால் சுத்தமாக அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தாராம். விஐபி பயணிகள் விமானத்துக்காக காத்திருக்கும் பகுதியில் நீண்டநேரமாக த்ரிஷா அமர்ந்திருந்ததை கண்காணித்த சில போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்தார்களாம்.
அப்போது தனக்கான அடையாள அட்டை அவர்களிடம் எடுத்து காண்பித்தாராம் த்ரிஷா. அதையடுத்தே அவர் நடிகை த்ரிஷா என்பது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது. பின்னர் பாதுகாப்பு கருதியே தாங்கள் இந்த விசாரணையில் ஈடுபட்டதாக அவர்கள் சொல்ல, நீங்கள் உங்கள் கடமையைத்தானே செய்தீர்கள் என்று சிரித்துக்கொண்டே அவர்களிடமிருந்து விடைபெற்றாராம் த்ரிஷா.