ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளைஞன் படத்திற்கு பிறகு கவிஞர் பா.விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் தகடு தகடு ஒரு சிடி முப்பது ரூபா. இவருக்கு ஜோடியாக சானியதாரா நடித்துள்ளார், ராகேஷ் என்ற புதுமுகம் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று(ஜூலை 12ம் தேதி) நடந்தது. விழாவில் கே.பாலசந்தர், டி.ராஜேந்தர், சி.வி.குமார், ஞானவேல் ராஜா, ஜெயம் ரவி, ஷாம் உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஆடியோவை கே.பாலசந்தர் வெளியிட்டார். விழாவில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார். ஆரம்பத்தில் கலகலப்பாக பேச ஆரம்பித்த டி.ஆர்., பின்னர் ஆவேசமாக பேச தொடங்கினார். அவர் பேசியதில் இருந்து...
டைட்டிலுக்கு சொந்தக்காரர் பாலசந்தர்
சினிமாவில் டைட்டிலுக்கு சொந்தக்காரர் என்றால் அது பாலசந்தர் அவர்கள் தான். சினிமாவில் நான் எதிர்நீச்சல் போட்டது, நூற்றுக்கு நூறு ஜெயித்தது இப்படி எல்லாமே அவர் படங்களின் டைட்டிலால் தான். மன்மதலீலை, ஏக் துஜே கேலியே, அவள் ஒரு தொடர்கதை போன்று படத்திற்கு அழகான தலைப்பு வைத்து அசத்தியவர். ரஜினி, கமலை பார்த்தால் எல்லோருக்கும் பாலசந்தர் ஞாபகம் தான் வரும். சுஹாசினி, சரிதா போன்றவர்களையும் உருவாக்கியவர் அவர் தான். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி கேட்டை திறந்து அறிமுகமான போது, யாரும் இவர் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று அப்போது போஸ்டர் அடித்து ஒட்டவில்லை. பாலசந்தர் மாதிரி நானும் எத்தனையோ வெற்றி மற்று வெள்ளி விழா படங்களை கொடுத்திருக்கிறேன். ஆனால் அதில் இருகோடுகளில் ஒரு சின்ன கோடு தான் நான், பெரிய கோடு பாலசந்தர் அவர்கள்.
எனக்கு என் மகன் என்றால் உயிர். இங்கு ஜெயம் ரவி இருப்பது அவரது அப்பா மோகனின் அன்பினால். இந்தப்படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக அந்த டீமுக்கு நான் முதலில் நன்றி சொல்கிறேன். படம் எடுப்பவர்களுக்கு சினிமாவின் பல்ஸ் தெரிய வேண்டும், இந்தப்படத்தின் தயாரிப்பாளருக்கு அது நன்றாகவே தெரிந்திருக்கிறது.
திருட்டு விசிடி கடையை அடித்து நொறுக்கியவன் நான்
திருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் தியேட்டரில் போய் படம் பார்க்க எவ்வளவு காசு ஆகுது என்று தெரியுமா, அதைப்பற்றி யாராவது பேசியிருக்கிறார்களா...? மத்திய அரசும், மாநில அரசும் திருட்டு விசிடியை தடுக்கணும் சொல்றாங்க, நடவடிக்கை எடுத்தபாடில்லை. ஆனால் நான் அப்படியில்லை வீராச்சாமி படத்தில் அருவாவை தூக்கின மாதிரி திருட்டு விசிடி கடையை அடிச்சு நொறுக்கி இருக்கேன். ஒரு மனிதன் ஏழையாக இருக்கலாம், கோழையாக இருக்க கூடாது.
பேராசை பிடித்தவர்கள்
நம்ம சொத்தை ஒருத்தன் அடிச்சுட்டு போனால் சும்மா விடுவோமா...? கள்ளநோட்டு அடித்தால் போலீஸ் சும்மா விடுமா, அதுமாதிரி பணம் போட்டு ஒரு படம் எடுத்தால் அதை திருட்டு விசிடியில் போட்டால் நாம சும்ம விடலாமா? விஞ்ஞானம் எல்லா ஊரிலும் தான் இருக்கு. ஆனால் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்த மாதிரி திருட்டு விசிடி அவ்வளவாக கிடையாது. ஆனால் இங்கு அப்படி இல்லை. காரணம் அங்கு இருப்பவர்களின் உழைப்பு கடுமையாக இருக்கு. இங்கு அப்படி இல்லை. மேலும் இங்கு இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
3 நாள் ஓடினால் வெற்றி படமா...?
ரூ.150 கொடுத்து தியேட்டரில் போய் படம் பார்க்கணுமா, அதுக்கு பேசாமல் ரூ.50 கொடுத்து சி.டி. வாங்கிட்டு போகலாம் என்று நினைக்கிறான். சினிமா தியேட்டர்களை காட்டிலும் அங்கு தான் கூட்டம் அதிகமாக வருகிறது. சமீபகாலமாக சின்ன பட்ஜெட் படங்கள் தான் நன்றாக ஓடுகிறது, ஆனால் இதுபோன்ற விஷயங்களால் அவர்கள் மூச்சு கூட விட முடியவில்லை. எங்க காலத்தில் 365 நாட்கள் ஒரு படம் ஓடும். ஆனால் இப்போ ஒரு படம் 3 நாட்கள் ஓடினால் அதுக்கு ஒரு வெற்றி விழா வைக்கிறாங்க. ரொம்ப கேவலமாக இருக்கு.
சினிமா வாழ டிக்கெட் விலையை குறைக்கணும்
மலிவு விலையில் சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்ட பல விஷயங்கள் செய்யும் போது இதை செய்ய முடியாதா...? இதையெல்லாம் டி.ஆர். எதுக்கு பேசுறான் என்று கேட்பீங்க, நான் பேசாமல் தமிழ்நாட்டில் வேறு யார் வந்து பேசப்போகிறார். வாங்க நாம எல்லோரும் சேர்ந்து போய் பேசுவோம். சினிமா வாழ வேண்டும் என்றால் தியேட்டரில் டிக்கெட் விலை குறைய வேண்டும். சினிமாவை நேசிப்பவர்கள் எல்லோரும் சினிமாவில் இருப்பாங்க, நாம எல்லோரும் சினிமாவில் இருக்கோம் என்று ஆவேசமாக பேசினார்.
டி.ராஜேந்தருக்கு முன்பாக பேசிய ஷாம், ஜெயம் ரவி உள்ளிட்டர்கள் இந்த விழாவிற்கு முக்கியமாக வந்ததே டி.ஆர்., சாரின் பேச்சை கேட்பதற்காகத்தான் என்று கூறினார்கள். அந்தளவுக்கு கலகலப்பாகவும், ஆவேசமாகவும் பேசினார் டி.ஆர்.,