600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
அம்புலி என்ற திகில் 3டி படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி-ஹரீஷ் இருவரும் தற்போது ஆ என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார்கள். பயம் வந்தால் கத்தும் ஒலியையே படத்தின் டைட்டிலாக்கியர்கள் அதன் பாடல் வெளியீட்டு விழாவையும் வித்தியாசமாக நடத்த விரும்பினார்கள். திகில் படம் என்றால் பேய், நள்ளிரவு சகஜம். அதனால் பாடல்களை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட முடிவு செய்தார்கள். விழாவாக வைத்தால் கூட்டம் சேராது என்பதால் ஒரு தனியார் ரேடியோவில் நேற்று (ஜூலை 11) நள்ளிரவில் ஆ வின் பாடல்களை வெளியிட்டனர். வெள்ளிக்கிழமை இரவில்தான் பேய்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் வெள்ளிக்கிழமையை தேர்வு செய்தனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர்கள் ஹரி-ஹரீஷ் கூறியதாவது: ஒரு படத்தை ஈசியாக எடுத்து விடலாம் அதற்கு விளம்பரம் செய்தவற்குத்தான் ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கிறது. படத்தின் தலைப்பை போலவே பாடல் வெளியீடும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் நள்ளிரவை தேர்ந்தெடுத்தோம். உலகத்திலேயே நள்ளிரவில் பாடல்களை வெளியிட்டது நாங்களாத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம். என்றார்கள்.
இந்தப் படத்தில் அம்புலி கோகுல்நாத், சிம்ஹா, மேக்னா, பாலா நடிக்கிறார்கள். வெங்கட்பிரபு சங்கர் இசை அமைத்துள்ளார். இயக்குனர்களே ஒளிப்பதிவும் செய்துள்ளனர்.