தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காயத்ரியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் நாட்டு மக்களையெல்லாம் ஒரே நாளில் அழவைத்து தெருவெங்கும் கண்ணீர் வெள்ளத்தை ஓட வைத்த மெட்டிஒலி சீரியலின் சரோ தான் காயத்ரி. மளமளவென சீரியல்களில் நடித்தவர் திடீரென விலகிச் சென்றார். கல்யாணிதான் அவர் கடைசியாக நடித்த சீரியல். இப்போது மீண்டும் நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
அதுபற்றி அவர் பகிர்ந்து கொண்டவை... ஒரு சீரியல்ல நடிக்கும்போது இன்னொரு சீரியல்ல நடிக்க கூடாதுங்ற பாலிசி உடையவள் நான். கடைசியா நடிச்ச கல்யாணிக்கு பிறகு நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தது. எந்த கதையுமே பிடிக்கல. நடிக்க வாய்ப்பே இல்லாம அழுது வடியுற சீரியல். நல்லா அழுவுறதுதான் நடிப்புன்னு வந்தாங்க வேண்டாமுன்னு சொல்லிட்டேன். சீரியல்ல நடிச்ச காலத்துல பேமிலியை ரொம்ப மிஸ் பண்ணினேன். இனி பேமிலிக்கு டயம் ஒதுக்குவோம்னு முடிவு பண்ணி சீரியல்லேருந்து விலகி இருந்தேன்.
ரொம்ப நாளைக்கு பிறகு வந்ததுதான் நெஞ்சத்தை கிள்ளாதே 30 வயதை தாண்டினவங்களோட காதல் கதை. அழவைக்கிறதுக்கோ, அனுதாபப்பட வைக்கிறதுக்கோ தேவையே இல்லாத அழகான கதை. எனக்கும் முப்பது வயதை தாண்டிட்டதால உடனே ஒத்துக்கிட்டேன்.
இனி கேப் விடாமல் நல்ல சீரியல்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நல்ல சினிமா வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். சும்மா பத்தோட ஒண்ணா இல்லாம நல்ல கேரக்டரா வந்தால் நடிப்பேன். சினிமாவுக்கு நான் புதிதில்லை. அஜீத்துக்கு ஜோடியா நடிச்சிருக்கேன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா. ராஜாவின் பார்வையிலேங்ற படத்துல விஜய்யும், அஜீத்தும் சேர்ந்து நடிச்சாங்க. அதுல நான் அஜீத்துக்கு ஜோடி. அப்போ எனக்கு வயது 15. என்கிறார் காயத்ரி.