இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்வி கேட்கிறான். இதனால் அந்த சமூகம் வளர்ச்சி அடைகிறது. அந்த கதையை இன்றைய சமூக கதையுடன் இணைத்து வித்தியாசமான திரைக்கதை அமைத்து ஆறாம் வேற்றுமையை எடுத்து வருகிறோம். ஹாலிவுட் படமான அபோகலிப்டோ பாணியிலான கதையும் இன்றைய கதையும் இணையும் புதிய முயற்சி" என்கிறார் இயக்குனர் ஹரிகிருஷ்ணா.