ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் உட்பட ஒரு சில படங்களில் நடித்தும் டேக் ஆஃப் ஆகாமலே இருந்தார் ஆர்யாவின் சத்யா. எப்படியாவது தம்பியை தூக்கி நிறுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அமரகாவியம் படத்தை தானே தயாரித்து தன்னுடைய தம்பியை ஹீரோவாக நடிக்க வைத்தார் ஆர்யா. அமரகாவியம் தொடங்கப்பட்டு பல மாதங்கள் கடந்தநிலையிலும் அந்தப் படம் பற்றி வெளியே தெரியாமலே இருந்தது. கடந்த மாதம் இசைவெளியீட்டுவிழா நடத்தப்பட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது.
அமரகாவியம் படம் குறித்து திரையுலகில் பேச்சு வந்தது மட்டுமல்ல, சத்யா மீதும் பல இயக்குநர்களின் பார்வையும் திரும்ப ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் அமரகாவியம் படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சென்னை சிங்கப்பூர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சத்யா. இந்தப் படத்தை பிரபல பட நிறுவனம் ஒன்றும் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றும் இணைந்து தயாரிக்க இருக்கிறது. தலைப்புக்கு ஏற்ப படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற இளைஞன், சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணை காதலிக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிய கதையாம் இது. சத்யா நடித்துள்ள அமரகாவியம் படத்திற்கு இசை அமைத்த ஜிப்ரான்தான் இந்த படத்திற்கும் இசை அமைக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் கதாநாயகி மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.