மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த சில வருடங்களாக மதுரைதான் தமிழ் சினிமாவின் மையக் களமாக இருந்தது. ஏறக்குறைய எல்லா நாயகர்களுமே மதுரை சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து விட்டார்கள். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதும் அதற்கான சென்டிமென்டாக அமைந்தது. ஆனால், தற்போது மதுரையை மையம் கொண்டிருந்த தமிழ் சினிமா கரை கடந்து சென்னைக்குத் திரும்பியிருக்கிறது. 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் சந்தானம் சொல்வதைப் போல “மதுரையைக் காப்பாத்த விஷால் இருக்கிறாரு, சசிகுமார் இருக்கிறாரு, ஆனால், சென்னையைக் காப்பாத்த நான்தானே இருக்கன்”னு டயலாக் பேசுவாரு. இப்போது சென்னையைக் காப்பாற்ற பல ஹீரோக்களும், இயக்குனர்களும் புறப்பட்டுவிட்டார்கள்.
அதிலும் குறிப்பாக அனைவருமே 'வட சென்னை'யைக் காப்பாற்றத்தான் கிளம்பியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி நடிக்கும் 'பூலோகம்' படத்திலும், கார்த்தி நடிக்கும் 'மெட்ராஸ்' படத்திலும் வட சென்னைதான கதைக் களம். சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நாயகனாக நடித்து வரும் 'ஐ' படத்தின் கதைக் களமும் வடசென்னைதானாம். விக்ரம் இந்தப் படத்தில் பாக்ஸராக, அதாவது குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளாராம். 'பூலோகம்' படத்திலும் ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரர்தான். ஒரே சமயத்தில் ஒரே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் “ஐ, பூலோகம்” இரண்டு படமுமே குத்துச் சண்டை வீரரைப் பற்றிய கதையாக உருவாகி வருவது ஆச்சரியமான ஒன்றுதான்.
'பூலோகம்' படத்தின் இயக்குனர் புதிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன், அதனால் முழு கதையையும் தயாரிப்பாளரிடம் சொல்லியிருப்பார். ஆனால், ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனராயிற்றே, அதனால் 'ஐ' படத்தின் கதையை கண்டிப்பாக தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்க மாட்டார் என்கிறார்கள் கோலிவுட்டினர். ம்ம்ம்..'வட சென்னை'யில் யார் வெற்றி வாகை சூடப் போகிறார்கள் என்று பார்ப்போம். இனி, கொஞ்ச நாளைக்கு தமிழ் சினிமாவில் 'சென்னைத் தமிழ்' தான்...!
இதுகண்டி கெலிச்சிடுச்சின்னா...அவ்ளோதான்...எல்லாரும் வூடு கட்டி அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க...