இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய் திரைப்பட கலைஞர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதே பாணியில் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் பேரிடர் ஆபத்து நேரும்போதெல்லாம் அதற்கு தேவையான நிதியை வசூலித்து கொடுத்து வருகிறோம். சினிமா மூலம் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லி வருகிறோம். ஏழை மக்களை மகிழ்வித்து வருகிறோம். நடிகர்களுக்கு நிரந்தர வருவாய் கிடையாது. அவர்களுக்கு சேவை வரிவிதிப்பதால் தயாரிப்பு செலவு அதிகரிக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள், அவர்களிடம் சேவை வரியை வசூலிக்க முடியாமல் நடிகர்கள் அவதிப்படுகிறார்கள். ஒப்பந்தப்படி நடிகர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்தம் செய்யப்பட்ட பல படங்கள் பாதியில் நிற்கிறது. அதற்கும் நடிகர்கள் சேவை வரி கட்ட வேண்டியதிருக்கிறது.
மேற்கண்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு திரைப்பட கலைஞர்களுக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த ஆண்டு இந்த கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தோம். இந்த அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இவ்வாறு சரத்குமார் கடிதத்தில் கூறியுள்ளார்.
கேயார் : இதே கோரிக்கையை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் மத்திய ஒளிபரப்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேதருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "திரைப்பட கலைஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், திரைப்பட தணிக்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும். புனே திரைப்பட கல்லூரியில் உள்ளதைப்போன்று சென்னை திரைப்பட கல்லூரியில் பழைய தமிழ் திரைப்பட நெகடிவ்களை பாதுக்கா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.