இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
உதயநிதி ஸ்டாலி, நயன்தாரா சந்தானம் ஆகியோர் நடக்கும் படம் நண்பேண்டா. இதன் படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதமாக தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது உதயநிதி, சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை மணிமண்டபம் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலை ஒன்று உள்ளது. இது 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான சிறைச்சாலை. இங்கு அரசின் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடத்த உதயநிதி திட்டமிட்டார். இதனால் அந்த சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற முன்னேற்பாடு பணிகள் நடந்தது.
அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு நடத்த உதயநிதி, சந்தானம் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அந்த இடத்திற்கு சென்றனர். உதயநிதி, சந்தானம் இருவரும் கேரவனில் இருந்தனர். மற்றவர்கள் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் "நீங்கள் முறையாக படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கவில்லை. எனவே வெளியோ போங்கள் இல்லாவிட்டால் போலீசை அழைக்க வேண்டியதிருக்கும்" என்றார்கள். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினர் இடத்தை காலிசெய்து விட்டு திருச்சிக்கு திரும்பி விட்டனர்.
நடந்தது என்ன என்பதை பற்றி கூர்நோக்க இல்ல பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னையில் உள்ள சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சமூக நலத்துறை முடிவெடுக்க வேண்டும் என்று அந்த துறையின் செயலாளருக்கு பாதுகாப்புத்துறை செயலாளர் கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தின் ஒரு நகலை படப்பிடிப்பு குழுவினருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தையே அனுமதி கடிதம் போன்று காட்டி படப்பிடிப்பு நடத்த முயற்சித்தனர். கடைசி நேரத்தில் அதனை கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்து விட்டோம் என்றார்.