Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முறையான அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்த முயற்சி: உதயநிதியை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

10 ஜூலை, 2014 - 17:12 IST
எழுத்தின் அளவு:

உதயநிதி ஸ்டாலி, நயன்தாரா சந்தானம் ஆகியோர் நடக்கும் படம் நண்பேண்டா. இதன் படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதமாக தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. தற்போது உதயநிதி, சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.


தஞ்சை மணிமண்டபம் அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலை ஒன்று உள்ளது. இது 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான சிறைச்சாலை. இங்கு அரசின் சிறுவர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடத்த உதயநிதி திட்டமிட்டார். இதனால் அந்த சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற முன்னேற்பாடு பணிகள் நடந்தது.


அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு நடத்த உதயநிதி, சந்தானம் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் அந்த இடத்திற்கு சென்றனர். உதயநிதி, சந்தானம் இருவரும் கேரவனில் இருந்தனர். மற்றவர்கள் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் "நீங்கள் முறையாக படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கவில்லை. எனவே வெளியோ போங்கள் இல்லாவிட்டால் போலீசை அழைக்க வேண்டியதிருக்கும்" என்றார்கள். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு குழுவினர் இடத்தை காலிசெய்து விட்டு திருச்சிக்கு திரும்பி விட்டனர்.


நடந்தது என்ன என்பதை பற்றி கூர்நோக்க இல்ல பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு சென்னையில் உள்ள சமூக பாதுகாப்புத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சமூக நலத்துறை முடிவெடுக்க வேண்டும் என்று அந்த துறையின் செயலாளருக்கு பாதுகாப்புத்துறை செயலாளர் கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தின் ஒரு நகலை படப்பிடிப்பு குழுவினருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தையே அனுமதி கடிதம் போன்று காட்டி படப்பிடிப்பு நடத்த முயற்சித்தனர். கடைசி நேரத்தில் அதனை கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்து விட்டோம் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in