இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
லிங்குசாமி தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் அஞ்சான் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. அஞ்சான் டீஸரை 13 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று அப்படம் சம்மந்தப்பட்டவர்கள் சந்தோஷப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் அஞ்சான் டீஸரை பார்த்த பிறகு தெலுங்கில் அஞ்சான் படத்தைப் பற்றி நெகட்டிவ்வான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, சில வருடங்களுக்கு முன்பு மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி ஆந்திராவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் - பிசினஸ்மேன்.
இந்தப் படத்தின் அப்பட்டமான காப்பிதான் அஞ்சான் படம் என்ற செய்தி தெலுங்குப்பட உலகத்தில் பரவி வருகிறது. இப்படியொரு செய்தி பரவ என்ன காரணம்? அஞ்சான் படத்தின் கதையும், பிசினஸ்மேன் படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளதா? கதையில் ஒற்றுமை இல்லையாம். ஒரு வசனத்தில்தான் ஒற்றுமை என்கிறார்கள். பிசினஸ்மேன் படத்தில் என் பெயர் சூர்யா இல்ல, சூர்யா பாய் என்று வசனம் பேசுவார் மகேஷ்பாபு.
அஞ்சான் படத்தில் என் பேர் ராஜு இல்ல, ராஜூ பாய்னு சொல்லு என்ற வசனத்தைப் பேசுகிறார் சூர்யா. இந்த ஒற்றுமையை வைத்து அஞ்சான் படத்துக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்குப்பட உலகினர். அதுமட்டுமல்ல, அஞ்சான் படத்தை பிசினஸ்மேன் படத்துடன் ஒப்பிட்டு பேச இன்னொரு சம்பவமும் காரணம். இந்தக் கதையை முதலில் தெலுங்கில் இயக்கும் திட்டத்துடன் மகேஷ் பாபுவிடம்தான் லிங்குசாமி சொன்னாராம். கதையைக் கேட்ட மகேஷ்பாபு, இது பிசினஸ்மேன் கதை போலவே இருக்கு என்று சொல்லி லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகுதான் சூர்யாவிடம் அதே கதையைச் சொல்லி ஓகே பண்ணினாராம் லிங்குசாமி.
தமிழில் அஞ்சான் என்ற பெயரில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் படம் வெளியாக இருக்கிறது. அஞ்சான் படம் பற்றி தற்போது பரவிவரும் வதந்தியினால் தெலுங்கு பிசினஸ் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் உள்ளது லிங்குசாமி தரப்பு.