அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கடந்த சில வருடங்களாக மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் நம்பியார் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் நேற்று (09.07.2014) மாலை நடைபெற்றது. அந்த விழாவுக்கு 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்..
நம்பியார் படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு வந்த சூர்யா, ஆர்யா, பவர்ஸ்டார், விமல், ஜீவா போன்ற நட்சத்திரங்கள் உள்ளே வரும்போதெல்லாம் மாணவிகளின் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளந்தன. மாலை 5 மணிக்கு தேவி தியேட்டருக்கு அழைத்து வரப்பட்ட அந்த மாணவிகள், 9.30 மணிக்கு விழா முடிவடைந்ததும் எப்படி திரும்பிச்செல்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். சுமார் ஐந்து மணி நேரம் அங்கிருந்த மாணவிகளுக்கு ஒரு பெப்ஸியையும், ஒரு பப்ஸையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
சினிமா விழாவுக்கு கல்லூரி மாணவிகளை யார் கூட்டி வந்தார்கள்? என்று அங்கு வந்த மாணவிகள் சிலரிடம் கேட்டபோது, சூர்யாவைப் பாக்கலாம் வான்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தாங்க என்று பல மாணவிகள் பதில் அளித்தனர். அந்த மாணவிகள் அனைவருமே இரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள்! அதுமட்டுமல்ல, அக்கல்லூரிகளின் ஹாஸ்டல்களில் தங்கி படித்து வரும் மாணவிகள்! அதைவிட முக்கியமான விஷயம்... அவர்கள் அனைவருமே வெளியூரைச் சேர்ந்த ஏழை மாணவிகள்! ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் இந்த மாணவிகளை சினிமா நடிகர்களைக் காட்டுகிறோம் என்ற ஆசையைக் காட்டி இந்த விழாவுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
ஒரு சினிமாவிழாவுக்கு 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை வரவழைக்க என்ன காரணம்? யார் இவர்களை ஏற்பாடு செய்தது? சூர்யாவைப் பாக்கலாம்...ஆர்யாவைப் பாக்கலாம்..சந்தானத்தைப் பாக்கலாம் என்றெல்லாம் மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளைக் காட்டி 300 கல்லூரி மாணவிகளையும் அழைத்து வந்திருக்கின்றனர். படிக்க அனுப்பப்பட்ட பெண் பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்களுக்குத் தெரியாமல், சினிமா விழாக்களுக்கு அனுப்பியவர்கள் மீது சம்மந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?