ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் செளந்தர்யா ரஜினி. அதையடுத்து ரஜினி நடித்த சில படங்களின் தலைப்புகளை வடிவமைத்து கொடுத்து வந்த செளந்தர்யா, கோவா படத்தில் தயாரிப்பாளரானார். அதையடுத்து, சுல்தான் தி வாரியர் என்ற கிராபிக்ஸ் படத்தை ரஜினி-விஜயலட்சுமியை வைத்து இயக்கினார். ஆனால், அந்த படம் சரியாக வரவில்லை.
அதன்பிறகுதான் கோச்சடையானை தொடங்கினார். கிட்டத்தட்ட சுல்தான் தி வாரியர் படம் கொடுத்த அனுபவத்திலேயே இந்த படத்தை இயக்கிய செளந்தர்யா, இப்போது பேசப்படும் இயக்குனராகி விட்டார். அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், தனது ஒவ்வொரு விசயங்களையும் டுவிட்டர் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வரும் செளந்தர்யா, தற்போது அப்பா ரஜினி, அம்மா லதாவின் பெயரை தனது கையில் பச்சைக்குத்தியிருப்பதை போட்டோவுடன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கோச்சடையானுக்குப்பிறகு என் மகள் செளந்தர்யா என்னை வைத்து படம் இயக்கியபோது ஆக்சன்-கட் சொன்னதைக்கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டேன். சொந்த மகளே தங்களை இயக்குகிற பாக்கியம் எத்தனை நடிகர்களுக்கு கிடைக்கும். அதை எனக்கு கொடுத்து பெரிய சந்தோசத்தை என் மகள் செளந்தர்யா கொடுத்து விட்டார் என்று சில மேடைகளில் மகளைப்பற்றி சொல்லி வரும் ரஜினி, மகள் தங்கள் மீதான பாசத்தை இப்படி கையில் பச்சைக்குத்தி வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்து, மேலும் நெகிழ்ந்து போயிருக்கிறாராம்.