மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய், சமந்தா நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பின் இடைவெளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யும், ஏ.ஆர்.முருகதாசும் ஐதராபாத் அருகில் உள்ள கடப்பா தர்காவிற்கு சென்ற வழிபாடு நடத்தி திரும்பி இருக்கிறார்கள்.
இந்த தர்காவிற்கு ஏ.ஆர்.ரகுமான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் அடிக்கடி வருவார்கள். முதன் முறையாக அமீர்கான், ஏ.ஆர்.முருகதாசை இந்த தர்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அன்றிலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தர்காவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த முறை அவர் விஜய்யையும் அழைத்துச் சென்றிருக்கிறார். விஜய் சாதாரண டி சர்ட் அணிந்து தலையில் தொப்பி அணிந்த தர்காவின் உள்ளே சென்று வழிபாடு நடத்தினார்.
"இது ஒரு சின்ன ஆன்மீக ரிலாக்ஸ். கத்தி படப்பிடிப்பு 80 சதவிகிதம் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் டிரைய்லர் வெளிவருகிறது" என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.