தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் கன்னத்தில் முத்தமிட்டால், பாய்ஸ், கஜினி, ஏழாம் அறிவு உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ரவி கே.சந்திரன்.தற்போது, ஜீவா நடிப்பில் யான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்திய அளவில் முன்னணி ஒளிப்பதிவாளரான இவரது அண்ணன் ராமச்சந்திர பாபுவும் பெரிய ஒளிப்பதிவாளர்தான். மலையாள சினிமாவில் 42 வருடங்களாக ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் 150 படங்கள் வரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பல படங்களுக்கு அவர் தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், விரைவில் மலையாள நடிகர் தீலிப்பை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிப்படங்களுக்கும் இதுவரை இசையமைத்து விட்டேன், குறிப்பாக மலையாளத்தில் தான் அதிக படங்களுக்கு பணியாற்றியிருக்கிறேன். மணிரத்னம் தமிழில் இயக்கிய முதல் படமான பகல் நிலவு படத்துக்கும். மணிரத்னம் இயக்கிய உணரு என்ற மலையாள படத்துக்கு நான்தான் ஒளிப்பதிவு செய்தேன். இதேபோல் பாசில், ப்ரியதர்ஷன் உள்பட அனைத்து முன்னணி டைரக்டர்களிலும் வேலை செய்திருக்கிறேன்.
ஆக, என் சகோதரர் ரவி கே.சந்திரனைத் தொடர்ந்து எனக்கும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதற்கான கதை உருவாக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன். அந்த படத்தில் மலையாள நடிகர் திலீப் நடிக்கிறார். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்த கேமராமேன் ராமச்சந்திர பாபு, வெறும் கமர்சியலாக இல்லாமல், கண்டிப்பாக சமுதாயத்துக்கு ஏதேனும் நல்ல கருத்தை சொல்லும வகையில் அந்த படம் இருக்கும் என்கிறார்.