தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அறிந்தும் அறியாமலும், குண்டக்க மண்டக்க, பட்டியல், நர்த்தகி, ஒரு நடிகையின் வாக்குமூலம் போன்ற படங்களை தயாரித்தவர் புன்னகை பூ கீதா. மலேசிய தமிழரான இவர், ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் முதன்முதலாக நடிப்பில் முகம் காட்டியவர், இப்போது மலேசியாவில் உருவாகியுள்ள மைந்தன் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மலேசிய தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை குமரேசன் என்பவர் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். இதே படத்தில் மலேசிய டத்தோ சாமுவேலின் மருமகளான ஷைலுவும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார்.
அஸ்ட்ரோ ஷா என்ற மலேசிய பட நிறுவனம் தயாரித்துள்ள மைந்தன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மதியம் சென்னையில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அவ்விழாவில் டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், சமுத்திரகனி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், இந்த படத்தின் ஹீரோ அவர் சிறுவயதாக இருந்தபோது நான் கமலை வைத்து இயக்கிய சகலகலா வல்லவன், ரஜினியை இயக்கிய முரட்டுக்காளை போன்ற படங்களை பார்த்தே தன்னை வளர்த்துக்கொண்டதாக சொன்னார். அப்படியென்றால் நாளைக்கு அவரும் ஒரு ரஜினி மாதிரியோ, கமல் மாதிரியோ பெரிய நடிகராக வரவாய்ப்பிருக்கிறது. அதோடு, இந்த படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ள புன்னகை பூ கீதா அழகான தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு சினிமாவில் நடிக்கும் எந்த நடிகைகளுக்கும் தமிழ் தெரியவில்லை. அப்படியே ஓரளவு தெரிந்தாலும் அவர்கள் தமிழில் பேசுவதில்லை. ஆனால், கீதா ஒரு ஆங்கில வார்த்தைகூட கலக்காமல் சுத்த தமிழில் பேசினார்.
அதேபோல் இதே படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஷைலுவும் மலேசிய தமிழ் பெண்தான். டத்தோ சாமுவேலின் மருமகள். ஆக, இதுவரை தமிழ்ப்படங்களின் ஆடியோ விழாக்களை மலேசியாவில் நடத்தியது போன்று, அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதனால், இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்றார்.
அதையடுத்து புன்னகை பூ கீதா பேசும்போது, சினிமாவில் நான் பல படங்களை தயாரித்தபோதும், அப்போதெல்லாம் எனக்கு நடிக்க வேண்டுமென்ற ஆசை வரவில்லை. திரைக்கு பின்னாடியே இருந்து வந்தேன். ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் மட்டும் முகம் காட்டினேன். ஆனால், மைந்தன் படத்தை இயக்கிய நாயகனாக நடித்துள்ள மலேசிய தமிழ் நடிகரான குமரேசன், என்னை ஹீரோயினாக நடிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன்.
இருப்பினும் என்னை விடாமல் துரத்திய அவர், அந்த கதையையும், எனக்குரிய கேரக்டரையும் சொன்னபோது இம்ப்ரஸ் ஆகி விட்டேன். அதன்பிறகுதான் கதாநாயகியாக கேமரா முன்பு வந்தேன். ஆக நடிப்பு என்றாலே விழுந்தடித்து ஓடும் என்னை இப்போது நடிகையாக்கி விட்டனர். அந்த வகையில், மைந்தன் படத்தில் நடித்தபோது கீழே விழுந்து ரத்தக்காயமெல்லாம் பட்டிருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டு நடித்தாலும் இஷ்டப்பட்டு நடித்ததால் என் நடிப்பு நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் பாராட்டுகிறார்கள்.
அதைப்பார்த்து இப்போது விமல் நடிக்கும் நீயெல்லாம் நல்லா வருவேடா படத்திலும் நடிக்க வைத்து விட்டனர். ஆக, நானே எதிர்பார்க்காத வகையில் என் நடிப்பு கேரியர் ஸ்டார்ட்டாகி விட்டது. என்றாலும், என்னை அதிகமாக பாதிக்கும் கதைகளில் மட்டுமே தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் கீதா.