Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா நண்பர்கள் துரோகி ஆகிவிட்டார்கள்: விஜய் சேதுபதி வருத்தம்

04 ஜூலை, 2014 - 16:58 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய இடத்துக்கு வந்தவர் விஜய் சேதுபதி. எந்த பின்புலமும் இல்லாமல் மிகச் சாதாரண குடும்பத்திலிருந்து கடுமையாக உழைத்து நடிகர் ஆனவர். மளமளவென உயர்ந்த விஜய் சேதுபதியின் கேரியரில் திடீரென பல ஸ்பீட் பிரேக்கர்கள். தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்கள் வரை நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் சொந்தமாக தயாரிக்க இருந்த சங்கதேவன் என்ற ஒரு படம் அவரை பின்னோக்கி தள்ளிவிட்டது. அது பற்றி மனம் திறந்திருக்கிறார் விஜய்சேதுபதி.


அவர் கூறியிருப்பதாவது: இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சினிமாவுக்கு அறிமுகமானப்போது இருந்த நிலை வேறு. இன்று இருக்கும் நிலை வேறு. இரண்டு வருட சினிமா எனக்கு நிறைய அனுபவங்களை கொடுத்திருக்கு. அடுத்தடுத்து படங்கள் என்று நிற்காமல் ஓடினேன். சினிமாவுல எல்லாமே தெரிஞ்ச மாதிரி இருந்தது. ஆனா இப்போ சினிமா அவ்வளவு ஈசியில்லை. நாம இன்னும் சினிமாவை புரிஞ்சக்கலைன்னு தெரியுது. சினிமாவில் உள்ள சில மனிதர்களை பற்றியும் இப்போதான் புரிஞ்சிக்கிட்டிருக்கேன்.


ஒரு படத்துல கஷ்டப்பட்டு நடிச்சா மட்டும் போதாது. அந்த படத்துக்கு நல்ல புரமோஷனை தயாரிப்பாளர் கொடுக்கணும். நான் நடிச்ச ஒரு படத்துக்கு இரண்டே நாள்ல புரமோஷனை நிறுத்திட்டாங்க. அந்த தயாரிப்பாளர்கிட்ட இன்னும் கொஞ்சம் போஸ்டராவது ஒட்டுங்கன்னு கெஞ்சினேன் அவர் கேட்கல. இது அந்தப் படத்துக்கு மட்டுமில்ல என்னோட எல்லா படத்துக்கும் இதுதான் நடந்துச்சு. 5 வருடத்துக்கு முன்னாடி கன்னடத்துல ஒரு படம் நடிச்சேன். நாலஞ்சு சீன்தான் நடிச்சிருப்பேன். அந்த படம் அங்கு ரிலீசாச்சான்னுகூட தெரியாது. திடீர்னு அதை விஜய்சேதுபதி நடிக்கும் படம்னு இங்கு ரிலீஸ் பண்றாங்க. இது தவறான பப்ளிசிட்டி.


நான் நல்ல வசதியா இருக்கிறதா நினைக்கிறாங்க. இப்பவும் ஒன்றரை கோடி கடன்லதான் இருக்கேன். சங்குதேவன் படத்தை நான் தயாரிக்க எடுத்த முடிவுதான் தவறான முடிவு. அதனால 5 மாசம் சும்மா இருக்க வேண்டியதாப்போச்சு. பணக் கஷ்டம் பெரிய விஷயம் இல்லை. அதை நான் சம்பாதிச்சுடுவேன். ஆனா நண்பனாக பழகி துரோகியாக மாறினவங்கதான் எனக்கு கவலையை பரிசாக கொடுத்திருக்காங்க. இனி நான் என்னோட முடிவுகளை சரியாக எடுப்பேன்.


புறம்போக்கு, வசந்தகுமாரன், மெல்லிசை, ஆரஞ்சு மிட்டாய்னு வெரைட்டியா படங்கள் பண்ணிக்கிட்டிருக்கேன். ஆரஞ்சு மிட்டாய்ல 55 வயசுக்காரனாக நடிக்கிறேன். என்னோட தனிப்பட்ட விஷயங்களில் இருக்கும் கவலை என் படங்களை பாதிக்க விட மாட்டேன். ஒரு நல்ல நடிகனாக ரசிகர்களுக்கு படம் கொடுத்துகிட்டே இருப்பேன் என்கிறார் விஜய் சேதுபதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in