பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல பாலிவுட் நடிகை ஜியாகான் கடந்த ஆண்டு ஜூன் 3ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் தூக்கு கயிறு இறுகியதற்கான காயங்களும் காணப்பட்டது. பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஆதித்யா பஞ்சோலி, சாரினா வஹாம் ஆகியோரின் மகனான சூரஜ் பஞ்சோலியும், ஜியாகானும் காதலித்து வந்தனர். அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்தான் ஜியாகான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சூரஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்டார். இது தொடர்பான வழக்கு மும்பை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜியா கானின் அம்மா ரபியா கான் தன் மகள் தற்கொலை செய்யவில்லை என்றும் அவள் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜியா கான் மரணம் குறித்த வழக்கை விசாரிக்குமாறு சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது. மும்பை போலீசார் இந்த விஷயத்தில் சி.பி.ஐக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த தீர்ப்பு பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.