'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐ படத்தை வழக்கம்போல் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ள ஷங்கர், அடுத்து ஏற்கனவே தான் ரஜினியை வைத்து 200 கோடி பட்ஜெட்டில் இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், அந்த படத்திலும் ரஜினியே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரை சந்தித்து பேசினார்.
ஆனால், தனது உடல்நிலை அதற்கு ஒத்து வராது என்று சொல்லி, தவிர்த்து விட்டார் ரஜினி. அதனால், அடுத்து யாரை நடிக்க வைக்கலாம் என்று தீவிர ஆலோசனை நடத்தி வந்த ஷங்கர், இப்போது இந்தி நடிகர் அமீர்கானை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இந்திய அளவில் பெரிய நடிகரான அவர் நடித்தால் எந்திரனை விட எந்திரன்-2 இன்னும் பெரிய படமாகி விடும் என்று நினைப்பவர், அப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இயக்குகிறாராம்.
இதுகுறித்து, அமீர்கானை ஷங்கர் சந்தித்து பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனபோதும், ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் அப்படம் பற்றிய தகவல்களை வெளியிடுவாராம். மேலும், 200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் தயாரான நிலையில், இரண்டாம் பாகத்தை 250 கோடியில் இயக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஷங்கர். அப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.