ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரசியலை விட்டு கொஞ்சம் விலகியிருந்து விரைவில் 150வது படத்தில் நடிக்கும் முடிவை சிரஞ்சீவி எடுத்ததும், அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. தற்போதைய செய்தி, சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெற உள்ள அந்தப் படத்தின் தொடக்க விழாவில் அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அநேகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மட்டுமல்லாது அமிதாப் பச்சனும் கலந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
80களில் துவக்கத்திலிருந்தே, இந்தியில் அமிதாப்பச்சன், தெலுங்கில் சிரஞ்சீவி, தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திரையுலகில் கோலோச்சி வருகிறார்கள். இவர்கள் அனைவருமே 100 படங்களைக் கடந்தும், ஏறக்குறைய 40 ஆண்டு காலமாக திரையுலகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
90களிலேயே ரஜினிகாந்த், அமிதாப் ஆகியோரை விட முதன் முதலாக 1 கோடி ரூபாய் சம்பளத்தைக் கடந்தவர் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் அவர் நடித்து படங்கள் வெளிவந்தால் அவை கண்டிப்பாக ஹிட்டாகி விடும் என்றே இருந்தது. ஆந்திராவில் பல ஊர்களில் விடியற்காலை காட்சி என்றெல்லாம் கூட படங்கள் திரையிடப்படும். அது சிரஞ்சீவி படங்களால் மட்டுமே ஆரம்பமான விஷயம். தற்போது அது தமிழ்நாட்டிலும் தொற்றிக் கொண்டுவிட்டது. இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்திய சிரஞ்சீவியின் 150 வது படத்தை மணிரத்னம், வி.வி. விநாயக், பூரி ஜெகன்னாத், போயபட்டி சீனு, ஹரீஷ் சங்கர் போன்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குவார் எனத் தெரிகிறது. இவர்களில் வி.வி. விநாயக்கிற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என்று டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். எப்படியோ, சிரஞ்சீவியின் 150வது படம் ஒரு திருவிழாவாகவே அமையப் போகிறது என சிரஞ்சீவியின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.