தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய்வசந்த் சுமார் அரை டஜன் படங்களில் நடித்தும் அங்கீகாரம் கிடைக்காத நடிகராகவே இருந்து வந்தார். கடைசியாக அவர் நடித்த என்னமோ நடக்குது படம் வித்தியாசமான படம் என்ற மவுத் டாக்கிலேயே வெற்றி எலக்கை எட்டி வசூலையும் குவித்தது. திரைப்படக் கல்லூரி மாணவரான ராஜபாண்டி என்பவர் என்னமோ நடக்குது படத்தை இயக்கி இருந்தார். என்னமோ நடக்குது படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜபாண்டிக்கு பெரிய நிறுவனங்கள், பெரிய ஹீரோக்களிமிருந்து எல்லாம் அழைப்பு வந்தநிலையில், நன்றிகடனுக்காக தனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்த விஜய்வசந்தை வைத்தே அடுத்தப் படத்தை இயக்குகிறார். சிகண்டி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கான பிரஸ்மீட் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்த பிரஸ்மீட்டிலேயே என்னமோ நடக்குது படத்துக்கான வெற்றிவிழாவையும் நடத்தி டூ இன் ஒன் விழாவாக்கிவிட்டார் விஜய் வசந்த்.