'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வசந்த் அணட் கோ அண்ணாச்சி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நடித்த என்னமோ நடக்குது படம் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. பெரிய அளவில் லாபம் சம்பாதிக்காவிட்டாலும் தயாரிப்பாளருக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் திருப்திகரமான படமாக இருந்தது. இந்தப் படத்தை அண்ணாச்சியின் இளைய மகன் வினோத்குமார் தயாரித்திருந்தார்.
இப்போது வினோத்குமார் தனது அண்ணனுக்காக அடுத்த படத்தை தயாரிக்கிறார். என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் சிகண்டிதான் விஜய் வசந்தின் அடுத்த படம். "சிகண்டி என்பது மகாபாரதத்தில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அந்த பாத்திரத்திற்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இருப்பதால் சிகண்டி என்று பெயர் வைத்துள்ளோம். கதையை பற்றி இப்போது எதுவும் சொல்ல இயலாது" என்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.
"என்னமோ நடக்குது படத்தில் போஸ்டர் ஒட்டும் அழுக்கு பையனாக நடித்தேன். பன்ஞ் டயலாக் பேசி பறந்து அடிக்கும் ஹீரோவாக நடிக்க விரும்பவில்லை. அப்படி ஒரு இடத்தை அடையவும் இல்லை. அழுக்கு பையனாக நடிப்பதில் தயக்கமும் இல்லை. இந்த விஷயத்தில் தனுஷ்தான் எனது ரோல்மாடல். என்னமோ நடக்குது படத்தில் தாய் சரண்யாவை அடிப்பது போலவும், கெட்ட வார்த்தையில் திட்டியும் நடித்திருந்தேன். குடிசை பகுதிகளில் நிஜத்தில் அப்படிப்பட்ட அம்மாக்கள் இருந்தாலும் அப்படி நடித்தற்காக சிலர் வருத்தப்பட்டார்கள். நானும் அதை உணர்கிறேன். இனி அதுமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்" என்கிறார் விஜய் வசந்த்.