பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டில் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே சம்பளத்தில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது என நடிகைகள் வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார்கள். ஆனால், நடிகை கரீனா கபூர் , எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது, இது விஷயமாக எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
“பெரிய பட்ஜெட் படமாக இருந்தால், எனக்கு என்ன சம்பளம் தர வேண்டுமோ அதைக் கொடுத்து விடுகிறார்கள். ஒருவருக்கு கிடைப்பது மற்றவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஒவ்வொரு நடிகருக்கும், நடிகைக்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணமாக, 'டர்ட்டி பிக்சர்' படத்தில் என்னால் நடித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு பொறுமையும், தைரியமும் எனக்குக் கிடையாது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் 'கோல்மால் 3' போன்ற படங்களில் நடிப்பது சவாலான ஒரு விஷயம். 'சிங்கம்' போன்ற படங்களில் நடிப்பதே எனக்குப் பெருமைதான். யாருடனும் யாரையும் ஒப்பிடக் கூடாது,” என்றார்.
'டர்ட்டி பிக்சர்' போன்ற படங்களில் வித்யா பாலன் நடித்த பிறகு நடிகைகளுக்கு இந்தியத் திரையுலகில் நல்ல எதிர்காலம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதே சமயம், நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் சரிசமமான சம்பளம் கிடைக்க சண்டை போடுவேன் என்றும் தெரிவித்தார். திருமணமான பின் கரீனா, அஜய் தேவகன் ஜோடியாக நடித்துள்ள 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்' படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ளது.